AIADMK

அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டார்.

அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்

  1. சேலம்
  2. நாமக்கல்
  3. கிருஷ்ணகிரி
  4. ஈரோடு
  5. கரூர்
  6. திருப்பூர்
  7. பொள்ளாச்சி
  8. ஆரணி
  9. திருவண்ணாமலை
  10. சிதம்பரம் (தனி)
  11. பெரம்பலூர்
  12. தேனி
  13. மதுரை
  14. நீலகிரி (தனி)
  15. திருநெல்வேலி
  16. நாகப்பட்டனம் (தனி)
  17. மயிலாடுதுரை
  18. திருவள்ளூர் (தனி)
  19. காஞ்சிபுரம் (தனி)
  20. தென் சென்னை

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி. அப்போது அவரை பிரேமலதாவும் சுதீஷும் வரவேற்றனர். முதல்வருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இன்று மாலை அதிமுகவின் அதிகாரப்பூர்வமான தொகுதி பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும், விஜயகாந்தின் உடல்நலம் குறித்து முதல்வர் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது.

ராமதாஸ் – விஜயகாந்த் சந்திப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்துடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் நேரில் சந்தித்தார். இவர்கள் சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து விசாரிக்கத்தான் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை என ராமதாஸ் தரப்பில் கூறப்பட்டாலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இரு கட்சிகளும் இடம் பெற்றுள்ளதால் தொகுதி பங்கீடு குறித்து விவாதித்து இருப்பார்கள் என கருதப்படுகிறது.

ராகுலைவிட மோடிதான் சூப்பர்: ஜி.கே. வாசன்

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தியை பற்றி கருத்து தெரிவித்த ஜி.கே வாசன் ராகுலை விட மோடி தான் சூப்பர் எனவும், அதிமுக தலைமையிலான கூட்டணிதான் மதசார்பற்ற கூட்டணி எனவும் கூறினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பிரதான நோக்கம் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பது தான் அதற்காக தொடர்ந்து உழைத்து கொண்டிருக்கிறோம் என்றார்.

நான்கு தொகுதிக்கு 400 பேரிடம் நேர்காணல் நடத்தியது தேமுதிக

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர், வடசென்னை அல்லது நாகப்பட்டினம் தொகுதியில் அக்கட்சி போட்டியிடலாம் என கூறப்படுகிறது. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் நேற்று நடைபெற்றது. இதில் 400 பேர் பங்கு கொண்டனர் அதிலிருந்து அக்கட்சி நான்கு பேரை தேர்வு செய்ய உள்ளது. விஜயகாந்த் நிலை கண்டு அக்கட்சியினர் வேதனை அடைந்தனர். விரைவில் குணமடைந்து வருவார் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.

யாருக்கு எந்த தொகுதி என்பது குறித்து அதிமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி அமைந்தது அந்த கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக உட்பட சில கட்சிகள் இருக்கின்றன. யாருக்கு எந்த தொகுதிகள் என்பதை ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் அதிமுக தலைமையகம் வந்தனர். அதனைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக தொகுதிப் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது.

மக்களவைத் தேர்தலில் தேமுதிகவிற்கு எந்தெந்த தொகுதிகள்?

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. மேலும் தேமுதிக பொருத்தவரை கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இம்முறை கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் மற்றும் சுதீஷ் கட்சி சார்பாக களமிறங்குவார்கள் எனவும் தெரிகிறது.

இன்று அதிமுக தாமாக கூட்டணி அறிவிப்பு

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், உட்பட சில கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளோடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இன்று அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்பு உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு மேல் ஒப்பந்தம் கையெழுத்தாகி கூட்டணி உடன்பாடு எட்டப் படலாம் எனவும் தெரிகிறது.

சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் விநியோகம்

18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற அதிமுகவினர் நாளை விண்ணப்பிக்கலாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளனர், மேலும் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வதற்காக நேர்காணல் நடைபெற்று வருகிறது. அது நிறைவு பெற்றவுடன் சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

பாமக-விற்கு எந்தெந்த தொகுதிகள்?

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை சிதம்பரம், தர்மபுரி, ஆரணி, அரக்கோணம், திண்டுக்கல், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளன. மேலும் ஆரணி தொகுதியை பொறுத்தவரை சௌமியா அன்புமணி அவர்கள் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் தேமுதிக அதிமுக கூட்டணி

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக பாமக போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அவர்கள் வரிசையில் தேமுதிகவும் இணையும் என்ற தகவல் கடந்த மூன்று வாரங்களாக பேசப்பட்டு வந்த நிலையில் நேற்று தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. தொகுதி பங்கீடுகளில் தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்கியுள்ளது அதிமுக தலைமை. மேலும் அவர்கள் கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி, போன்ற தொகுதிகளை கோரியுள்ளதாகவும் தெரிகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் இணையும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைவதில் எந்த இழுபறியும் இல்லை எனவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் விரைவில் இணைவதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் மிக விரைவில் கையெழுத்தாகும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

துரைமுருகன் வெளியில் சொன்னது தவறு, தம்பிதுரை கருத்து

வருகின்ற மக்களவை தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என முடிவு செய்துள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இடம்பெறும் என அதிமுக தரப்பில் கூறப்பட்டு வந்தது. ஆனால் தீடிரென நேற்று திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் தொலைபேசி வாயிலாக அழைத்து பேசியுள்ளார். இதனை பொது வெளியில் துரைமுருகன் கூறியது தவறு என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கண்டித்துள்ளார். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேசத்தான் செய்வார்கள் அதனை பொது வெளியில் சொல்வது சரியல்ல என்று அவர் கூறினார்.

தமிழகத்தில் 500 புதிய பேருந்து தொடங்கி வைத்தார் பழனிச்சாமி

தமிழக போக்குவரத்துத் துறைக்கு ரூபாய் 133 கோடியில் வழங்கப்பட்ட 500 புதிய பேருந்து இயக்கத்தை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். தமிழக அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஒரு கோடியே 74 லட்சம் பேர் தினமும் பயணிக்கிறார்கள். அந்த வகையில் பொது மக்கள் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 8 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல நவீன வசதிகள் கொண்ட பேருந்துகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தொடங்கி வைத்தார்.

பிரதமர் கூட்டத்தில் பங்கேற்க ராமதாஸ்க்கு அழைப்பு

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியும் இடம்பெற்றுள்ளது. இன்று கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நிகழ்வு சென்னை வண்டலூர் அருகே நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும் இந்த கூட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களை அழைக்கும் விதமாக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் அவரை நேரில் சந்தித்து வரவேற்றனர். ஆகையால் இன்றைய நிகழ்வில் ராமதாஸ் அவர்கள் நிச்சயம் பங்கேற்ப்பார் என தகவல் வெளியாகியுள்ளன.

அரசியலுக்கு ரீஎண்டரி கொடுத்த நாஞ்சில் சம்பத்

DMK: அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன் என சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் நாஞ்சில் சம்பத். ஆனால் தற்போது அவர் மிண்டும் அரசியலுக்கு வந்துள்ளார். டிடிவி தினகரனுக்கு ஆதரவான நிலையில் இருந்தவர் தினகரன் அவர்கள் ஆரம்பித்த அமமுக இயக்கத்தில் திராவிடம் என்ற சொல் இல்லாத காரணத்தால் அவர் அந்த இயக்கத்தில் இருந்து விலகினார். தற்போது திமுகவோடு இணைந்துள்ளதாக தகவல் வெளியாயின. அதனை உறுதி செய்யும் வகையில் திமுக நிகழ்வில் நாஞ்சில் சம்பத் பேசியது குறிப்பிடத்தக்கது.

நாளை சென்னை வருகிறார் மோடி

Modi In Chennai: மக்களவை தேர்தலில் பாஜக தமிழகத்தில் கணிசமான வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கில் அதிமுகவோடு கூட்டணி வைத்துள்ளனர். இந்த கூட்டணியில் பாமகவும் உள்ளது. தேமுதிகவும் விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வண்டலூர் அருகே நடைபெறும் மாபெரும் பொதுகூட்டத்தில் மோடி பங்கேற்கிறார். மேலும் முதல்வர், துணை முதல்வர், அன்புமணி ராமதாஸ், போன்ற தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு 1 தொகுதி

Elections 2019 அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி இணைந்துள்ளது. அந்த கட்சிக்கு ஒரு தொகுதி -ஒதுக்கப்படும் என ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது, மேலும் வருகின்ற 21வது சட்டமன்ற தேர்தலிலும் புதிய நீதி கட்சி அதிமுக ஆதரவு நிலைபாடு எடுக்கும் என தெரிகிறது. ஒதுக்கப்பட்டுள்ள 1 தொகுதியில் அக்கட்சியின் தலைவர் சண்முகம் போட்டியிடுவார் என தெரிகிறது.

புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி

Elections 2019 அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி என துணை முதல்வர் ஓபிஸ் அறிவித்துள்ளார். அதுவும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியே போட்டியிடுவார் என தெரிகிறது. இதுவரை 15 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக கொடுத்துள்ளது. மீதமுள்ள 25 தொகுதிகளில் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

எந்த தொகுதியிலும் போட்டியிட தயார், தமிழிசை பேச்சு

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 5 தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை பாஜக சார்பாக வானதி ஸ்ரீனிவாசன், அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை, நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடலாம் என தெரிகிறது. பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழிசை “எந்த தொகுதியாக இருந்தாலும் நான் போட்டியிட தயார்”, அது எந்த தொகுதியில் போட்டியிடும் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும்” என்றார்.

40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் ராமதாஸ் கணிப்பு

Lok Sabha Elections 2019 Tamil Nadu: மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அதிமுக கூட்டணியில் பாஜகவும் பாமகவும் இடம்பெற்றுள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகளும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தேமுதிகவும் எங்கள் கூட்டணிக்கு இணைவார்கள் என அதிமுக தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. இந்த வேளையில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குக்கர் சின்னத்தை பெறுவோம் டிடிவி தினகரன் நம்பிக்கை

AMMK: நேற்று உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் இரட்டை இலைச் சின்னம் தற்போதைய முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் செயல்படும் அதிமுகவிற்கே உரியது எனவும் டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாது எனவும் தீர்ப்பளித்திருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உச்ச நீதிமன்றத்தை நாடி குக்கர் சின்னத்தை பெற ஆமமுககவுக்கு உரிமை உள்ளது எனவும் நிச்சயம் நாங்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் குக்கர் சின்னத்திலேயே போட்டியிடுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரிந்து சென்றவர்கள் இணைய வேண்டும் ஓபிஎஸ் அழைப்பு

AIADMK: வருகின்ற மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக, பாஜக, பாமக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என துணை முதலமைச்சர் ஓபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரட்டை இலை சின்னம் தினகரனுக்கு இல்லை, உயர்நீதிமன்றம் உத்தரவு

இரட்டை இலைச் சின்னத்தை பெற வேண்டும் என்ற நோக்கில் டி டி வி தினகரன் அவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது, பல கட்ட விசாரணைக்கு பிறகு இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு தான் என்ற தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது, இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் இரட்டை இலையை எந்த கொம்பனாலும் முடக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி தமிழிசை பேச்சு

BJP AIADMK PMK alliance 2019: வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் என தமிழிசை பேசியுள்ளார். எண்ணிக்கை பெரிதல்ல எண்ணம்தான் பெரிது எனவும் , 40 இடங்களிலும் எதிர்க்கட்சிகள் பலவீனமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மார்ச் 6ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருவதாகவும் , அப்போது கூட்டணி கட்சித் தலைவர்களும் அந்த கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார்.

பாமக நிச்சயம் தோல்வியை சந்திக்கும் வன்னியர் சங்க தலைவர் பேட்டி

Elections 2019: அகில இந்திய வன்னியர் சங்கத்தலைவர் ஜெய ஹரி அன்புமணி ராமதாஸ் அவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பது அனைத்து மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது அனைவருக்கும் ஏமாற்றத்தையும் தந்துள்ளது.அதிமுக பாமக பாஜக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்திப்பது நிச்சயம் எனக் கூறியுள்ளார். இதன்மூலம் அன்புமணி ராமதாஸ் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை உடைந்து உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதிமுக சின்னத்தில் போட்டியிட தயார் பாரிவேந்தர் அறிவிப்பு

Elections 2019: மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த பாரிவேந்தர் தற்போது பாஜக எங்களை அழைத்தால் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பாரதிய ஜனதா கட்சி கேட்டுக் கொண்டால் அதிமுகவின் சின்னத்திலும் நாங்கள் நிற்க தயார் என தெரிவித்துள்ளார். ஒருவேளை அந்தக் கூட்டணி சரிவராத பட்சத்தில் மூன்றாவது அணி அமைத்து போட்டியிட வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.

திமுகவின் தோழமைக் கட்சிகளும் எங்களோடு பேசுகிறார்கள் ஜெயக்குமார் தகவல்

Elections 2019: மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேரவேண்டும் என அனைத்துக் கட்சிகளும் விரும்புவதாகவும் குறிப்பாக திமுக தலைமையில் இருக்கும் சில கட்சிகளே எங்களோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த திருமாவளவன் திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவே அமைச்சர் இவ்வாறு பேசுகிறார் என தெரிவித்தார்.

அதிமுக ரயில் டெல்லி செல்கிறது, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

AIADMK: அதிமுக என்னும் ரயில் டெல்லி செல்வதாகவும், விருப்பம் உள்ள கட்சிகள் எங்களோடு சேர்ந்து பயணிக்கலாம் எனவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். எங்களோடு இணைந்தால் பத்திரமாக டெல்லி செங்கோட்டை செல்லலாம் எனவும் ஏராவிட்டால் இன்ஜின் இல்லாத ரயிலில் தான் ஏற வேண்டும் என திமுகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுவரை எந்த கட்சியுடன் கூட்டு சேரா கட்சிகளுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அழைப்பு விடுத்து உள்ளதாக தெரிகிறது.

சின்ன பையனை வைத்து பேச வேண்டாம்- ராஜேந்திரபாலாஜி விமர்சனம்

AIADMK: மக்களவை தேர்தலில் தேமுதிக எந்த கட்சியுடன் இணையும் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. சில கட்சிகளை விஜயகாந்த் அவர்களின் மகன் விஜயபிரபாகர் கட்சி மேடைகளில் விமர்சித்து வருகிறார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராஜேந்திரபாலாஜி சின்ன பையனை வைத்து தேமுதிக பேசவேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் தயவு இல்லாமல் யாரும் பிரதமராக முடியாது ராஜேந்திரபாலாஜி

AIADMK: ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உரையாற்றினார். அப்போது அதிமுகவின் தயவு இல்லாமல் யாரும் பிரதமராக முடியாது என தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய கட்சியாக இருந்தாலும் பாஜக அதிமுகவை சார்ந்துதான் இருக்கிறது என்ற தொனியில் பேசி இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நம்பிக்கை இழக்காதீர்கள்- அன்புமணி

Lok Sabha Elections 2019: சென்னையில் இன்று அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது “அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டிருக்கும் எங்களின் கோரிக்கைகளை அதிமுகவிடம் கொடுத்துள்ளோம். ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை விடாமல் இருப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் உறுதி அளித்தார். எழுவர் விடுதலை நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று அறிமுகப்படுத்தி இருக்கிறது. நீட் மற்றும் மதுவிலக்கு வேண்டாம் என தொடர் அழுத்தம் கொடுப்போம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனியாக போட்டியிட்டு 6% வாக்குகள் பெற்று மூன்றாவது இடமும் அதற்காக அங்கீகாரம் கிடைக்கவில்லை. தமிழக மக்கள் எங்களுக்கு அங்கு இடம் கொடுக்கவில்லை. தேர்தல் அறிக்கையை பாராட்டினார்கள். ஆனால் ஓட்டு போடவில்லை. தமிழகத்தில் இனி எந்த கட்சியும் தனியாக வரும் 15 ஆண்டுகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. அதனால் தான் வியூகத்தை மாற்றியுள்ளோம்” என கூறினார்.

தேமுதிக கூட்டணிக்கு வராவிட்டால் கவலை இல்லை ஜெயக்குமார் பேச்சு

Elections 2019: மக்களவைத் தேர்தலை சந்திப்பதற்காக அதிமுக மாபெரும் கூட்டணியை அமைத்து வருகின்றது. அந்த வகையில் ஏற்கனவே பாஜகவும் பாமகவும் இணைந்துள்ளனர்.அதிமுக கட்சி சார்பாக தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் தேமுதிக வந்தால் மகிழ்ச்சி வரவில்லை என்றால் கவலை இல்லை என தெரிவித்துள்ளார்.

தேமுதிகவுடன் சுமூகமான பேச்சுவார்த்தை, ஓபிஸ் தகவல்

Lok Sabha 2019: மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணையும் என தெரிகிறது. ஆனால் நீண்ட நாட்களாக இழுபறி நீடிக்கிறது. இதற்கு காரணம் பாமக வுக்கு வழங்கியுள்ளது போல் 7 தொகுதிகளுக்கு மேல் வழங்க வேண்டும் என தேமுதிக நிர்பந்திப்பதாகவும் அதற்கு அதிமுக மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், சுமூகமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் எனவும் துணை முதல்வர் ஓபிஸ் தகவல்.

டிடிவி தினகரனை விமர்சித்த அமைச்சர் ஜெயகுமார்

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் தினகரன் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். மேலும் பேசிய அவர் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் போட்டியே தவிர யாரும் எங்களுக்கு போட்டியாக இல்லை எனவும் தெரிவித்துள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணியே பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

முதல்வர், துணை முதல்வர் நேரில் அஞ்சலி

இன்று காலை அதிமுகவின் எம்.பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணமடைந்தார், இந்த நிகழ்வு அதிமுக தொண்டர்களை மட்டுமின்றி அனைவரையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது, அவரது உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் பழனிச்சாமி, தமிழிசை சந்திப்பு

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக-பாமக கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளனர், அதில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இந்த வேளையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திதுள்ளார், இந்த சந்திப்பில் பாஜகவிற்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து விவாதிக்கபட்டலாம் என தகவல்.

சாலை விபத்தில் அதிமுக எம்பி ராஜேந்திரன் மரணம்

விழுப்புரம் எம்பி ராஜேந்திரன் விழுப்புரம் திண்டிவனம் சாலையில் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது விபத்தில் மரணம் அடைந்துள்ளார். இந்த செய்தி அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. விபத்து நிகழ்ந்த உடன் அவர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஆனால் அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

மயிலாடுதுறையில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியா?

Lok Sabha 2019: தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி தான் ஒதுக்குவதற்கு அதிமுக முன்வந்துள்ளது. அதுவும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தான் அந்த கட்சிக்கு ஆதரவு அதிகம் என்பதால் மயிலாடுதுறை தொகுதியை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ்.

அமித் ஷா இன்று தமிழகம் வருகை

மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் தலைவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்கிறார்கள் அந்த வகையில். பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார் அமித் ஷா. அரசியல் நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்க உள்ளார்.

கூட்டணியில் இருந்து வெளியேறினார் தமிமுன் அன்சாரி

Lok Sabha Election 2019 Latest News:  அதிமுகவின் தோழமை கட்சிகளாக இருந்துவந்தது மனிதநேய ஜனநாயக கட்சி ஆனால் தற்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் நாங்கள் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம். இனி அதிமுகவுக்கு ஆதரவு கிடையாது என தமிமுன் அன்சாரி பகிரங்கமாக அறிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயமாகிறதா வெற்றிக்கூட்டணி?

Lok Sabha Election 2019 Tamil Nadu:  மக்களவை தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கப்படும் என பாஜக தலைவர் தமிழிசை தொடர்ந்து கூறிவந்தார். அவர் கூறியது போல முன்று பெரிய கட்சிகள் அடங்கிய வெற்றி கூட்டணி அமைந்ததுள்ளது. மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் அதிமுகவும், மத்தியில் ஆட்சி புரியும் பாஜகவும் கூட்டணி அமைக்கும் என ஒரு மாதமாகவே பேசப்பட்டு வந்தது. அவர்கள் கூட்டணியில் மேலும் சில மாநில கட்சிகள் இணையும் என கூறப்பட்டது. அதேபோல் பாமகவும் அதிமுக-பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ளது. அதிலும் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தொகுதி பங்கீடு குறித்த விவரம்

பாமக – 7
பாஜக 5

அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற அறிவிப்பு இதர கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தை முடிவிற்கு பின் தெரியவரும்.

இணைந்தது பாமக

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டியிட போவதாக அறிவித்திருந்த நிலையில் அதிமுகவோடு கைகோர்த்துள்ளது பாமக. இன்று அதனை உறுதி செய்யும் வகையில், பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசினர். அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பாமகவிற்கு 7 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மேலும் நடக்கவிருக்கும் 21 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு நிலைப்பாடை எடுக்கும் என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை துணை முதல்வர் ஓபிஸ் அறிவித்தார். பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுக்கப்படும் என தெரிகிறது.

கைகோர்த்த பாஜக

ஒரு மாதமாக ஆலோசிக்க பட்ட நிலையில், தற்போது தான் அதிமுக-பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுள்ளது. இதில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு ஒதுக்கபட்ட தொகுதிகளில் தமிழக பாஜக தலைவர்களே போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. குறிப்பாக தமிழிசை,வானதி ஸ்ரீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், ஹச்.ராஜா ஆகியோர் போட்டியிடலாம் என தெரிகிறது.

தேமுதிகாவின் நிலைப்பாடு என்ன ?

இந்த பாஜக-அதிமுக-பாமக கூட்டணியில் தேமுதிக இணையும் என்றே கூறப்படுகிறது. கடந்த வாரம் பேட்டி ஒன்றில் “பாஜகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது” என தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் கூறினார். தேமுதிகவும் இதில் இணைந்தால் அவர்களுக்கு எத்தணை தொகுதி ஒதுக்கப்படும் என்ற கேள்வியும் எழுகிறது. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு 12 தொகுதி ஒதுக்கப்பட்டதால் மீதமுள்ள 28இல் எத்தனை தொகுதி தேமுதிகவுக்கு கொடுக்கப்படும்? தனக்கான தொகுதியை குறைத்து கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக கொடுக்குமா? என்பதற்கு விரைவில் பதில் அளிக்கப்படும்.

திமுக கூட்டணிக்கு சவாலா ?

இப்போது அமைந்துள்ள கூட்டணி வலிமையான கூட்டணி என்பதில் ஐயமில்லை. இந்த கூட்டணி ”வெற்றிக்கூட்டணி”யாக உருவெடுக்குமா என்ற கேள்விக்கு மக்களே பதில் சொல்ல வேண்டும். மேலும் மறுமுனையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் உள்ளன, அவர்களும் தொகுதி பங்கீடு குறித்து நாளை அறிவிக்கிறார்கள். திமுகவுக்கு நிகரான கூட்டணியாக அதிமுக தலைமையிலான கூட்டணி அமையும். இது திமுகவுக்கு சவாலாகவும் அமைய வாய்ப்புள்ளது.

யாருக்கு எந்த தொகுதிகள் ?

அதிமுக-பாமக-பாஜக கட்சிகளில் யார் எங்கு போட்டியிடுவார் என்ற தகவல் முக்கியதுவம் வாய்ந்தது. பாஜகவை பொருத்த வரை குறிப்பிட்ட தொகுதிகளில் தான் ஆதரவு உள்ளது. கடந்த முறை பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆக அந்த தொகுதியை பாஜக தக்கவைக்க முயற்சிக்கும். மேலும் கொங்கு வட்டாரத்தில் ஒரு தொகுதியும் கேட்க வாய்ப்புண்டு. குறிப்பாக சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியையும் கேட்கலாம் என தெரிகிறது. அதே போல் பாமக தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் என்பதில் மாற்றுகருத்தில்லை. இது போல குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிட இந்த கட்சிகள் மும்முரமாக உள்ளன.

மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகளை அதிமுக தலைமலையிலான கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருந்தால் அது பாஜக ஆட்சி அமைக்க உபயோகமாக இருக்கும். நாடு முழுவதும் பாஜக காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஆகவே தமிழகத்தில் இந்த கூட்டணி வெற்றி பெற்றால் பாஜக தனது ஆட்சியை தக்கவைக்க சாதகமாக அமையும். பாஜக மீண்டும் ஆட்சியமைக்க விரும்பாதவர்கள் இந்த கூட்டணியை புறக்கணிப்பார்கள்.

நால்வர் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக உருவெடுக்குமா?

மக்களின் தீர்ப்பைப் பொருத்தே முடிவுகள் அமையும்.

Lok Sabha Election 2019 Latest News: உதயமாகிறதா வெற்றிக்கூட்டணி?

எதிரிகளை வீழ்த்துவதற்கான கூட்டணி

Lok Sabha Election 2019 Latest News & Updates:  அதிமுக தலையிலான கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது, இதனை திமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர், கொள்ளைக்கு முரணான கூட்டணி என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை “ இது எதிரிகளை வீழ்த்தும் கூட்டணியே தவிர, கொள்கைக்கான கூட்டணி அல்ல’ என தம்பிதுரை விளக்கமளித்துள்ளார்.

Lok Sabha Election 2019 Latest News: எதிரிகளை வீழ்த்துவதற்கான கூட்டணி

Lok Sabha Elections 2019 : பியூஷ் கோயலுடன் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு

Lok Sabha Election 2019 Alliance: இன்று காலை அதிமுகவும் பாமகவும் கூட்டணி என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது, பாமகவிற்கு 7 தொகுதிகள் என ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் பாஜகவுடனான கூட்டணியை இறுதி செய்ய மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஸ், ஆகியோர் சந்திப்பு நடைபெறுகிறது, பாஜகவுக்கு எவ்வளவு தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது. இந்த சந்திப்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தமிழக தலைவர் தமிழிசை ஆகியோர் பங்கேற்றனர்.

Lok Sabha Elections 2019: உதயமாகிறது நால்வர் கூட்டணி

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கப் படும் என அதிமுக தலைவர்கள் கூறி வந்த நிலையில் பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அதிமுகவும் பாஜகவும் நிச்சயம் கூட்டணி அமைக்கும் என்று பேசப்பட்டு நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. மேலும் இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே பாமகவும் இணைந்து விட்டது பாஜக-அதிமுக-பாமக. மூவர் கூட்டணியில் தேமுதிகவும் இணைய உள்ளதாக அரசியல் நிகழ்வுகள் சொல்கிறது. இவர்கள் நால்வரும் சேர்வதால் இந்த கூட்டணி வலிமை வாய்ந்த ஒன்றாக இருக்கும் எனவும். இந்த கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணிக்கு சவாலாக அமையும் என கூறப்படுகிறது.

Chennai News Today: CTS நிறுவன ஊழலில் அதிமுகவிற்கு தொடர்பு

Chennai News Today: சென்னையில் சி டி எஸ் நிறுவனத்திடம் கட்டிடம், மின் இணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெற அதிமுக அரசு 26 கோடி லஞ்சம் பெற்றுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஆதாரங்களும் சமர்பிக்கப்பட்டுவிட்டன. அதிமுக அரசின் இந்த இமாலய ஊழல் 2012 முதல் 2016 ஆம் ஆண்டிற்குள் நடந்துள்ளது. எனவே தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறை உடனடியாக வழக்கு பதிவு செய்து இந்த ஊழலில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Lok Sabha Elections 2019 : உறுதியானது அதிமுக பாமக கூட்டணி

Lok Sabha Election AIADMK – PMK Alliance: வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் பாமாகவும் ஓரணியில் திரண்டுள்ளனர்.
தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 7 தொகுதிகள் பாமகவிற்கு என துணை முதல்வர் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் நடக்க இருக்கும் 21 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Lok Sabha Elections 2019 News: கூட்டணியை உறுதி செய்ய தான் வந்தாரா அமித்ஷா

Lok Sabha Election Alliance in Tamil Nadu: தங்களது ஆட்சியை மீண்டும் தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கில் மாநில கட்சிகளோடு கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை  துவங்கியுள்ளது பாஜக. தமிழக அரசியலை பெருத்தவரையில் பாஜக ஒற்றரை இலக்கு வாக்கு வங்கியையே பெற்றுள்ளது, தமிழகத்தில் நடந்த கடைசி தேர்தலான ஆர்.கே நகர் தேர்தலில் நோட்டாவிற்கும் குறைவான வாக்குகளை பெற்றது பாஜக, தமிழகத்தில் தனது கட்சியை பலப்படுத்தும் நோக்கில் ஆட்சியில் இருக்கும் அதிமுகவோடு கூட்டணி தொடர்பாக சில தினங்களாகாவே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. அதிமுக-பாஜகவோடு மேலும் சில கட்சிகளும் சேரும் என்றே பேசப்பட்டது. அண்மையில் பாமக இளைகஞரணி செயலர் அன்புமணி ராமதாஸ் அதிமுகவோடு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றார், மேலும் தேமுதிக சார்பில் சில கட்சிகளோடு கூட்டணி குறித்து பேசி வருகிறோம் என்று அறிவிக்கப்பட்டது, அதிமுக தரப்பில் பேசிய வைத்தியலிங்கம் கூறியதாவது ‘’ பாமக, தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம்” என்றார். இந்த தருணத்தில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது, அமித்ஷா தமிழகம் வந்த அதே நாளில் தான் மத்திய அமைச்சர் பி்யுஷ் கோயலும் சென்னை விரைந்தார். தமிழக அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தனர், இது அவர்கள் கூட்டணியை தொடர்பான செய்தி உறுதியானது, ஆகவே அதிமுக-பாஜக கூட்டணியில் பாமகவும் தேமுதிகவும் இருப்பதாக கணிக்கப்படுகிறது. இதில் அதிமுகவையும் இதர மாநில கட்சிகளையும் இணைக்கும் வேலையில் பாஜக இறக்கியுள்ளதாக தெரிகிறது. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணியை உறுதி செய்தால் தொகுதி பங்கீடு பற்றிய கேள்வி ஏழும், அதற்கு பதில் தரும் விதமாக சமூக வலைதளத்தில் சில தகவல்கள் பரவி வருகிறது. அந்த தகவலின் அடிப்படையில்

அதிமுக  24 தொகுதிகளும்

பாஜக     8    தொகுதிகளும்

பாமக   4     தொகுதிகளும்

தேமுதிக  4  தொகுதிகளும்

போட்டியிடலாம் என்றே கூறப்படுகிறது, இருப்பினும் இவைகளில் எந்த கட்சியும் கூட்டணி முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் அறிவிக்கப் படும் என்றே றப்படுகிறது. மேலும் தமிழக மக்களிடையே இந்த கூட்டணி வரவேற்பை பெருமா என்ற கேள்விக்கு தேர்தல் முடிவுகளே சரியான பதிலாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

Lok Sabha Elections 2019: பாஜக 125 இடங்களில் மட்டுமே வெல்லும் வைகோ கணிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ம.தி.மு.க. நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் நிதியை பெற்றுக் கொண்டார். பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட வேண்டும். மேலும் பா.ஜ.க. அரசு தமிழகத்திற்கு செய்த துரோகம் கொஞ்ச நஞ்சமல்ல. இத்தேர்தலில் 125 இடங்களை மட்டுமே பாஜகவால் வெல்லமுடியும். தமிழகத்தைப் பொறுத்தவரை 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும் என்றார்.

Tamil Nadu Lok Sabha Elections 2019: தமிழகத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த தமிழிசை சவுந்தரராஜன் உறுதி

பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று ஈரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் இம்முறை தமிழகத்தில் பலமான கூட்டணி அமைத்து பா.ஜ.க. வெற்றி பெறும். தமிழகத்தில் பிரம்மாண்டமான ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். தமிழக மக்களுக்கு தொடர்ந்து வளர்ச்சியை கொடுப்போம் என உறுதியளித்தார். திமுக, காங்கிரஸ் தவிர இதர கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனவும், எந்தெந்த கட்சி என்பதை விரைவில் அறிவிப்போம் என்றார்,

Amit Shah in Tirupur,Tamil Nadu: திமுகவை அதிரடியாக தாக்கிய அமித் ஷா

நேற்று ஈரோட்டில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முதல்முறையாக திமுகவை குறிவைத்து கடுமையாக சாடியுள்ளார். “எங்களுக்கு எதிராக கொள்ளை கூட்டணி அமைந்து வருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கான கூட்டணி இல்லை; ஊழலுக்கான கூட்டணி” என்று கூறினார். மேலும் மக்களின் விருப்பத்தை கேட்டே பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் என்றும் கூறினார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

விவசாயத்தை பயபக்தியுடன் மேற்கொள்ளும் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த திரு. கந்தசாமி, பூவாத்தாள் தம்பதிக்கு மகளாக பிறந்தவர் வானதி.இவர் பிறந்த குக்கிராமமான உளியம்பாளையம், கோயம்புத்தூரின் பிரபல மருதமலை கோவிலுக்கு அருகாமையில் உள்ளது. தொண்டாமுத்தூர் அரசு பள்ளியில் தொடக்க மற்றும் இடைநிலை கல்வி பயின்ற வானதி, 10ஆம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றவர்.பேச்சு, நாடகம், வினாடிவினா மற்றும் கட்டுரைப்போட்டி என பல பிரிவுகளில் வெற்றி வெற்றி பள்ளியில் தனித்துவமான மாணவியாக இருந்தார். மேலும் கோகோ மற்றும் கைப்பந்து அணிகளின் கேப்டனாகவும் இருந்துள்ளார். கோயம்புத்தூர் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்ற வானதி, அங்கு சிறந்த மாணவி விருதையும் பெற்றார். பின்னர் சென்னை டாக்டர். அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் தனது சட்டப்படிப்பையும் முடித்தார். மதிப்புமிக்க மெட்ராஸ் பல்கலைகழகத்தில் சர்வதேச அரசியலமைப்பு சட்டம் என்ற பிரிவில் சட்டமேற்படிப்பையும் முடித்தார்.

Amit Shah in Tirupur,Tamil Nadu: திமுக-காங்கிரஸ் கூட்டணி பற்றி அமித்ஷா விமர்சனம்

மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்க இருக்கும் தருணத்தில், தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரத்தை துவங்கியுள்ளது பாஜக, பிரதமர் மோடி உட்பட தேசிய பாஜக தலைவர்கள் அனைவரும் தமிழகம் நோக்கி படையெடுக்கிறார்கள், அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார், தற்போது அமைந்துள்ள திமுக-காங்கிரஸ் கூட்டணி முன்னேற்றத்திற்கான கூட்டணி இல்லை என விமர்சித்த அவர் அடுத்த முறையும் மோடி தான் பிரதமர் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tamil Nadu News: ஏழை குடும்பங்களுக்கு 2000 வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2000 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் இந்த திட்டத்திற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில் தமிழகத்தில் அந்தயோத்யா அட்டைதாரர்கள் 18 லட்சம் பேர் மட்டுமே அப்படி இருக்கையில் 60 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளது என்று தமிழக அரசு கூறுவது எப்படி சரியாகும்? தேர்தலை கருத்தில் கொண்டு இந்த எண்ணிக்கையை தமிழக அரசு அதிகரித்துள்ளது. எனவே இத் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Amit Shah In Tamil Nadu: இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் தருணத்தில் தமிழகத்தில் தனது வாக்கு வங்கியை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் பாஜக தலைவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இன்று பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா ஈரோட்டிற்கு வருகிறார். ஈரோட்டில் பாஜக கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும் நெசவாளர்களையும் சந்திக்கிறார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

டெபாசிட் இழந்த தி.மு.க என்று நாங்கள் அழைக்கலாமா? – தமிழிசை சௌந்தர்ராஜன்

பா.ஜ.க. நோட்டா உடன் தான் போட்டி போடும் என்று கி வீரமணி கூறியதற்கு பதிலளித்துள்ள தமிழிசை சௌந்தர்ராஜன், “தேர்தலையே சந்திக்காத வீரமணி அவ்வாறு சொல்வதற்கு தகுதி அற்றவர். ஆர் கே நகர் தொகுதியில் தி.மு.க டெபாசிட் இழந்தது. அப்படி என்றால் தி.மு.க டெபாசிட் இழந்த கட்சி என்று நாங்கள் அழைக்கலாமா?” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் 2019: தம்பிதுரையை சமாதான படுத்துகிறதா அதிமுக தலைமை?

2019 Lok Sabha Elections Tamilnadu: வருகின்ற மக்களவை தேர்தலில் அதிமுவும் பாஜகவும் கூட்டணி அமைக்கும் என்பது தெளிவாக தெரிகிறது, பாஜக தேசிய செயலர் முரளிதர ராவ் செய்தியாளர் சந்திப்பில் பாஜக கூட்டணி உறுதியாகி விட்டது, இன்னும் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அவர் குறிப்பிட்டார். கூட்டணி அறிவிப்பு வெளியாகும் இந்த சமயத்திலும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார், அண்மையில் மக்களவையில் பேசிய தம்பிதுரை ஜி.எஸ்.டி வரி தொடர்பாக மாநில அரசிற்கு வர வேண்டிய தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும், அதனை பெற பிச்சை எடுப்பது போல் கேட்டு பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார், மேலும் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பாஜகவோடு நட்பும் கிடையாது, கூட்டணியும் கிடையாது என்ற அதிரடி பதிலையும் கொடுத்துள்ளார், இதன் மூலம் அதிமுக பாஜக கூட்டணியில் தம்பிதுரைக்கு சற்றும் விருப்பமில்லை என்பது தெரிகிறது. இதனை அதிமுக தலைமை எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதே மில்லியன் டாலர் கேள்வி, ஒருவேளை கூட்டணி அறிவிப்பு வெளியானதும் தனது அதிருப்தியை தெரிவிப்பார் என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு. இதனை தவிர்க்க அதிமுக தலைமை அவரை சமாதான செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்போது தம்பிதுரை கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர், வருகின்ற தேர்தலில் அவர் அதே தொகுதியில் போட்டியிடலாம். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட கிட்டதட்ட 2 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார் என்பதால் அதே தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பு.

மக்களவைத் தேர்தல் 2019: தம்பிதுரையை சமாதான படுத்துகிறதா அதிமுக தலைமை?

பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்?

2019 Lok Sabha Elections Tamilnadu: பாஜக – அதிமுக கூட்டணி அமையும் என்று ஓரிரு மாதங்களாகவே பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜகவின் தேசிய செயலர் முரளிதர ராவ் “தமிழகத்தில் கடந்த தேர்தலை எப்படி கூட்டணியோடு அணுகினோமோ அதேபோல் பலம் பொருந்திய கூட்டணியை அமைத்து இந்த தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என்று பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்’’ என்றார்.

அதோடு நிற்காமல் தமிழகத்தில் பாஜக கூட்டணி முடிவாகி விட்டதாக தெரிவித்தார், இதனால் புதிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் எனவும், மேலும் பாஜக அமைக்கும் கூட்டணி மாபெரும் வெற்றி பெரும் எனவும் கூறினார்.

பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? – 2019 Lok Sabha Elections Tamilnadu: Which parties are in the BJP coalition

ஆனால் அவர் பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெரும் என்பது குறித்து பேசவில்லை. பாஜக தலைவர்கள் சிலர் அதிமுகவோடு தான் கூட்டணி அமையும் என பேசிவருகிறார்கள். மேலும் சில கட்சிகள் கூட்டணியில் சேர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலையை பெருத்தவரையில் பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூட்டணி குறித்து இன்னும் முடிவெக்க வில்லை. பாமக இளைஞர் அணி செயலர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவோடு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என அண்மையில் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? – 2019 Lok Sabha Elections Tamilnadu: Which parties are in the BJP coalition

மேலும் தேமுதிகவும் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்த பின்னர் அதில் இணைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் திமுகவின் மெகா கூட்டணிக்கு நிகரான ஒரு பலம் வாய்ந்த கூட்டணியாக பாஜக கூட்டணி அமையும்.

ஒருவேளை நான்கு கட்சிகளும் ஒர் அணியில் திரளும் பட்சத்தில் தொகுதி பங்கீடு சவாலாக அமையும் என்பதிலும் சந்தேகமில்லை. கடந்த மக்களவை தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்தித்தது என்பது குறிப்பிடதக்கது.

பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? – 2019 Lok Sabha Elections Tamilnadu: Which parties are in the BJP coalition

பாஜக, பாமக, தேமுதிக உடன் அதிமுக ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை?

அதிமுக கூட்டணி குறித்த அறிவிப்பை மாநிலமே எதிர்பார்த்து வரும் நிலையில் கட்சி தலைமை அமைதி காத்து வருகிறது. இது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், “பாஜக, பாமக மற்றும் தேமுதிக உடன் அதிமுக ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்” என்றும் கூறியுள்ளார்.

தேர்தல் யுக்திகளை கையாளுகிறதா அதிமுக ?

வறுமை கோட்டிற்கு கீழே உள்ள தொழிலாளர்களுக்கு நிதியுதவியாக மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளர். தமிழகத்தை பொருத்தவரை அனைத்து வர்கத்தை சார்ந்தவரும் உள்ளனர். இன்றைய சமூகத்தில் பல்வேறு வளர்ச்சிகளை நாம் அணுதினமும் பார்க்கிறோம், ஆனால் அதனை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள நபர்களால் ருசிக்கமுடியாமல் போய்விடுகிறது. அதற்கு காரணம் நிதிநிலைமை. இன்றைய கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சிக்கு நிகராக வளர்ந்து வருகிறது. மருத்துவமும் செலவும் இமாலய உயரத்தை தொட்டுவிடுகிறது. இதன் விளைவாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் தங்களது அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த திட்டம் ஏழை தொழிலாளர்களின் துயரை மொத்தமாக நீக்கிவிடாது என்றாலும் அவர்களுக்கு அறுதலாக இருக்கும் என்பதே உண்மை. இந்த திட்டத்தின் வாயிலாக வருடத்திற்கு 24,000 ரூபாய் என்பது ஏழை தொழிலாளர்களுக்கு மிகவும் தேவையான ஓன்றாக இருக்கும். ஒரு கிராமப்புற குழந்தையின் கல்வி செலவுக்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் 60 லட்சம் தொழிலாளர்கள் நன்மை அடைவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

இது நல்ல திட்டம் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை, இருப்பினும் அதனை நடைமுறைபடுத்த இது சரியான காலம்தானா என்ற கேள்விகளை எழுப்புகிறது. அண்மையில் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, அப்போது தேர்தலை கருத்தில் கொண்டு தான் அதிமுக சில திட்டங்களை அறிவித்துள்ளது என்ற அதே குற்றச்சாட்டு இதற்க்கும் பொருந்தும். ஏழை தொழிலாளர்களுக்கு ஊக்க தொகை கொடுப்பது பெருமை அல்ல, ஏழை தொழிலாளர்களை உயர்த்த ஒரு திட்டம் தீட்டாதது ஏன் என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது. இந்த 2000 ரூபாயும் 60 லட்சம் தொழிலாளர்களை சென்று அடையுமா? இந்த திட்டம் எப்போது அமல் படுத்தப்படும், என்ற பதிலுக்காக காத்திருக்கிறார்கள் ஏழை தொழிலாளர்கள். பொதுவாகவே தமிழகத்தை பொருத்தவரை தேர்தல் வரும் சூழலில் இலவச திட்டங்கள், கடன் ரத்து போன்று திட்டங்களை அறிவித்து மக்களை கவர்வது தமிழக அரசியலில் வழக்கமான ஒன்று தான்.

அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – முத்தரசன் குற்றச்சாட்டு

தங்கள் கட்சியை தமிழகத்தில் வளர்த்து கொள்ள அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதற்காக அதிமுகவை மிரட்டுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். எங்கள் கட்சியை பொறுத்த வரையில் திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். தொகுதி பங்கீடு குறித்து இன்னும் அதிகார பூர்வ பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. பாஜக எத்தனை வியூகங்கள் வகுத்தாலும் பாஜக தமிழகத்தில் வளராது என்றார்.

அனைவரும் வருக கட்சிகளுக்கு ஜெயக்குமார் அழைப்பு

பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை துவங்க உள்ளது. இந்த தருணத்தில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வகிக்கும் என்ற கருத்துக்கள் நிலவி வருகிறது. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் திமுக அமமுகவை தவிர எந்த கட்சியாக இருந்தாலும் எங்களோடு கூட்டணி சேரலாம் என அனைத்து கட்சிகளுக்கும் கூட்டணிகான அழைப்பு விடுப்பதாக இன்றைய செய்தியாளர்களைச் சந்திப்பில் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெற்ற ஓபிஎஸ் மகன்

அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் நேற்று தொடங்கியது. இதை அடுத்து துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ளார். ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம். விருப்ப மனு கட்டணமாக 25 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

அதிமுக தனித்து போட்டியிடும் சூழல்தான் தற்போது உள்ளது – செல்லூர் ராஜு அதிரடி

மே மாதம் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக உள்ளனர். தமிழகத்தை பொருத்த வரையில் பாஜக-அதிமுக கூட்டணி அமையும் என்றே பரவலாக பேசபடுகிறது. அது தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்றைய சூழலில் நாற்பது தொகுதியிலும் தனித்து போட்டி என்ற நிலைதான் தொடர்கிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெற்றி பெறுவதற்கான வியுகங்களை எடுக்கும் என்றார்

வருமான வரி உச்சவரம்பை ரூ.8 லட்சமாக்க வேண்டும்: தம்பிதுரை வேண்டுகோள்

வருமான வரி உச்சவரம்பை ரூ.8 லட்சமாக்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார். கரூரில் 3 கோடியே 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைத்தல், சாலையை பலப்படுத்துதல், சிமெண்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருமான வரி விலக்கு உச்ச வரம்பை 8 லட்ச ரூபாயாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தரலாம்: அதிமுக அறிவிப்பு

மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக
போட்டியிட விருப்பமுள்ளவர்கள் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி பிப்ரவரி 4ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல்: அ.தி.மு.க., தொகுதிப் பங்கீட்டு, அறிக்கை தயாரிப்பு, பிரச்சாரம் நெறிப்படுத்துதல் குழுக்கள் அமைப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அதிமுக அமைத்துள்ளது. இந்த குழுவில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், தங்கமணி, வேலுமணி மற்றும் பிரபாகர் ஆகியோரும், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, மனோஜ் பாண்டியன், ரபி பெர்னாட் ஆகியோரும்,தேர்தல் பிரச்சாரத்தை நெறிப்படுத்தும் குழுவில் தம்பிதுரை உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.