பிரான்சின் பாரிஸ் நகரில் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. இதனால் அங்கு பல நகரங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த பனிப்பொழிவு பாரிசில் இருந்து ஐந்து சென்டிமீட்டர் வரை படர்ந்து இருக்கும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து ஈபிள் டவர் மூடப்பட்டுள்ளது. மேலும் இந்த டவர் எப்போதும் திறக்கப்படும் என்று எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.