பிரேசிலில் அணை உடைந்து ஏற்பட்ட விபத்தில் 50 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில், இந்த விபத்துக்கு காரணமாக இருந்ததாக கூறி தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 66 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் வரலாற்றில் விதிக்கப்பட்ட அபராதங்களில் மிகபெரிய அபராதம் இதுவாகும். இந்த விபத்தில் 20,000-க்கு மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்து உள்ளதுடன் பாதுகாப்பாக இடத்திற்கு இடம் பெயர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.