Union Minister Piyush Goyal

தூத்துக்குடி தொகுதியை கேட்கும் பாஜக

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 5 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஐந்து தொகுதிகளில் ஒரு தொகுதி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியாக இருக்கலாம் என ஏற்கனவே பேசப்பட்டு வந்த நிலையில் பாஜகவு தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் “தூத்துக்குடி தொகுதியை எங்களுக்குத் தர வேண்டும் என அதிமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவர்கள் தரும் பட்சத்தில், கட்சி மேலிடம் சம்மதித்தால் நான் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட தயாராக உள்ளேன் என தமிழிசை கூறியுள்ளார்.

அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம், என்ன பேசினார் மோடி?

இந்திய நாட்டின் 17வது மக்களவை தேர்தல் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் இறுதியில் நடைபெறவுள்ளது. அதனை கருத்தில் கொண்டு அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது. அந்த நிகழ்வில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஸ், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் உட்பட பல கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். தமிழகத்தில் திமுக சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது எனவும் கூறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் கூறித்தும் பேசினார்.

பிரதமர் மோடி அறிவித்த திட்டங்கள்

  • தமிழகம் வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு செய்யப்படும் என்றார்.
  • மேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் எனவும் அறிவித்தார்.
  • இலங்கை கடற்படையிடம் சிக்கி கொண்ட 1900 மீனவர்களை மத்திய அரசு மீட்டு கொடுத்துள்ளதையும் கூறிப்பிட்டார்.
  • இது போன்ற விஷயங்களை குறிப்பிட்ட பிரதமர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். அப்போது தனது வெறுப்புகளை வெளிப்படுத்த மாநில ஆட்சிகளை காங்கிரஸ் கட்சி கலைத்து இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மாநில அரசுகளின் தேவைகளை பூர்த்தி செய்யாமல் நாடு முன்னேற முடியாது என்றார். நாட்டின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கை எடுத்துவருகிறது என்பது குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும் என்றார். எதிர்கட்சிகளின் விமர்சனங்களும், எதிர்ப்புகளும் என்னை சோர்வடைய செய்யாது என்றார். தமிழக மக்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் என கோரிக்கை விடுத்தார். நிறைவாக பேசிய பிரதமர் நாற்பதும் நமதே நாடும் நமதே என்ற வாசகத்துடன் தனது உரையை நிறைவு செய்தார்.

    மீண்டும் வருவாரா மோடி ?

    பிரதமர் மோடி பாஜக பொதுகூட்டங்களில் கலந்து கொள்ள மீண்டும் தமிழகம் வருவார் என்று பாஜக பிரதிநிதிகள் தகவல் சொல்கிறார்கள். இந்த மக்களவை தேர்தலுக்கு பிறகு மோடி மீண்டும் பிரதமராக வருவாரா என்ற கேள்விக்கான துள்ளியமான பதிலை மக்கள் மிக விரைவில் தெரிவிப்பார்கள்.

    மீண்டும் வருமா பாஜக அல்லது மீண்டு வருமா காங்கிரஸ், மக்களவை தேர்தலில் மக்களின் பதிலுக்காக காத்திருப்போம்.

    உங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் ? ஓபிஸ் கேள்வி

    அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்ட மாபெரும் மாநாடு நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அதில் பேசிய தமிழக துணை முதல்வர் ஓபிஸ், எதிர்கட்சியினரை பார்த்து “உங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என உங்களால் கூற முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய அவர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இருந்திருந்தால் கூட்டணி விஷயத்தில் அவர் என்ன செய்திருப்பாரோ, அவரது தீவிர விஸ்வாசியாகிய நாங்களும் அதனையே செய்துள்ளோம் என்றார்.

    சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் – மோடி அறிவிப்பு

    அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர், பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உட்பட பல கட்சித் தலைவர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பிரதமர் மோடி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என அறிவித்தார். மேலும் பேசிய பிரதமர் தமிழகம் வந்து செல்லும் விமானங்களில் தகவல்கள் தமிழில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார், இறுதியில் “நாற்பதும் நமதே நாடும் நமதே” என கூறி உரையை நிறைவு செய்தார்.

    Lok Sabha Elections 2019 : பியூஷ் கோயலுடன் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு

    Lok Sabha Election 2019 Alliance: இன்று காலை அதிமுகவும் பாமகவும் கூட்டணி என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது, பாமகவிற்கு 7 தொகுதிகள் என ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் பாஜகவுடனான கூட்டணியை இறுதி செய்ய மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஸ், ஆகியோர் சந்திப்பு நடைபெறுகிறது, பாஜகவுக்கு எவ்வளவு தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது. இந்த சந்திப்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தமிழக தலைவர் தமிழிசை ஆகியோர் பங்கேற்றனர்.

    Lok Sabha Elections 2019 : உறுதியானது அதிமுக பாமக கூட்டணி

    Lok Sabha Election AIADMK – PMK Alliance: வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் பாமாகவும் ஓரணியில் திரண்டுள்ளனர்.
    தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 7 தொகுதிகள் பாமகவிற்கு என துணை முதல்வர் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் நடக்க இருக்கும் 21 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.