Trichy news today

இன்னும் சில ஆண்டுகள் மட்டும் உயிருடன் இருப்பேன் – கண்கலங்கிய வைகோ

கல்லூரி மாணவர்களிடையே காந்தி என்கின்ற தலைப்பில் பேசிய வைகோ, காந்தியின் நினைவு நாளில் அவருடைய உருவ பொம்மை பூஜா பாண்டே என்பவரால் சுட்டு தீயில் எரித்து கொண்டாடப்பட்டதை நினைவுகூர்ந்து கண் கலங்கினார். நா தழுதழுக்க தொடர்ந்து பேசிய அவர், நான் ஒரு போராளி. எனக்கு தோல்வியே கிடையாது. நாட்டின் மதச்சார்பின்மையை காப்பாற்ற தொடர்ந்து போராடுவேன். நான் இன்னும் சில ஆண்டுகள் மட்டும் தான் உயிருடன் இருப்பேன். ஆனால் வாழும் ஒவ்வொரு நிமிடமும் தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பேன் என்று உணர்ச்சி பொங்க பேசினார்.

அடுத்தடுத்த நாளில் இரண்டு போலீஸார் தற்கொலை

திருச்சியில் அடுத்தடுத்த நாளில் இரண்டு போலீஸார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சிறப்பு காவல்படைக்கான காவலர் குடியிருப்பில் காவலர் முத்து தூக்கில் தொங்கியதுடன் ரத்த காயங்களுடன் கண்டெடுக்கபட்டார். நேற்று மாலை திருச்சி பெண்கள் சிறை வார்டனாக பணிபுரியும் தமிழ்செல்வியும் தற்கொலை செய்து கொண்டார் இதற்கு அவரது காதல் தோல்வியே காரணம் என கூறப்படுகிறது. இந்த இரு சம்பங்களும் குறித்துட் திருச்சி காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.