இன்னும் சில ஆண்டுகள் மட்டும் உயிருடன் இருப்பேன் – கண்கலங்கிய வைகோ

vaiko-sentiment-speech

கல்லூரி மாணவர்களிடையே காந்தி என்கின்ற தலைப்பில் பேசிய வைகோ, காந்தியின் நினைவு நாளில் அவருடைய உருவ பொம்மை பூஜா பாண்டே என்பவரால் சுட்டு தீயில் எரித்து கொண்டாடப்பட்டதை நினைவுகூர்ந்து கண் கலங்கினார். நா தழுதழுக்க தொடர்ந்து பேசிய அவர், நான் ஒரு போராளி. எனக்கு தோல்வியே கிடையாது. நாட்டின் மதச்சார்பின்மையை காப்பாற்ற தொடர்ந்து போராடுவேன். நான் இன்னும் சில ஆண்டுகள் மட்டும் தான் உயிருடன் இருப்பேன். ஆனால் வாழும் ஒவ்வொரு நிமிடமும் தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பேன் என்று உணர்ச்சி பொங்க பேசினார்.