Tindivanam

முதல்வர், துணை முதல்வர் நேரில் அஞ்சலி

இன்று காலை அதிமுகவின் எம்.பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணமடைந்தார், இந்த நிகழ்வு அதிமுக தொண்டர்களை மட்டுமின்றி அனைவரையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது, அவரது உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

ராமதாஸ் இல்லத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்க்கு விருந்து

Lok Sabha 2019: மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவோடு கூட்டணி வைத்துள்ளது. மேலும் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த வேளையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விருந்திற்காக தனது இல்லத்திற்கு அழைத்திருந்தார். அழைப்பை ஏற்று முதல்வர் துணை முதல்வர் அமைச்சர் பெருமக்கள் வருகை புரிந்தனர். மக்களவைத் தேர்தல் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி விவாதித்ததாக தெரிகிறது.

எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் – முதல்வர் பேச்சு

Tindivanam: மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக பாமக கூட்டணி மாபெரும் வெற்றி பெறப்போகிறது. மத்திய அரசிடமிருந்து போதுமான நிதியை பெற்று தமிழகத்தின் வளத்தை பெருக்கும் ஒரே ஆட்சி அதிமுகவின் ஆட்சி தான் மேலும் வரும் மக்களவை தேர்தல் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகி வருகின்றனர் என்று தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

சாலை விபத்தில் அதிமுக எம்பி ராஜேந்திரன் மரணம்

விழுப்புரம் எம்பி ராஜேந்திரன் விழுப்புரம் திண்டிவனம் சாலையில் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது விபத்தில் மரணம் அடைந்துள்ளார். இந்த செய்தி அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. விபத்து நிகழ்ந்த உடன் அவர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஆனால் அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.