உத்தரபிரதேசத்தில் வசிக்கும் முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்த பெண், தனது பாட்டியை பார்க்க செல்ல வேண்டும் என்று தன் கணவரிடம் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு அவளது கணவர், பாட்டியை பார்க்க அரை மணி நேரம் மட்டும் அனுமதி அளித்துள்ளார். இதை தொடர்ந்து பாட்டியை பார்க்க சென்ற மனைவி, 40 நிமிடங்கள் கழித்து வீட்டுக்கு திரும்புயுள்ளார், தான் சொன்ன அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வரமால் லேட்டாக வந்ததால் கோபம் அடைந்த கணவர், தனது செல்போனிலேயே தனது மனைவியை ‘தலாக்’ என, மூன்று முறை கூறி, விவாகரத்து செய்துள்ளார்.