மக்களவைத் தேர்தல் நெருங்குவதால், அதற்கான பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பதவி இடத்துக்கு தற்போது சுஷில் சந்திராவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக தற்போது தேர்தல் ஆணையராக சுனில் அரோராவும் இரண்டு தேர்தல் ஆணையர்களாக சுசில் சந்திராவும்,அசோக் ஆகியோரும் இருப்பர்.