Republic Day 2019

Republic Day 2019: பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

நாட்டின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். குடியரசு தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வரலாற்றில் இடம் பெற உள்ள இந்தியாவின் 69-வது குடியரசு தினம்

நாளை கொண்டாடப்பட உள்ள இந்தியாவின் 69-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை நடைபெறும் அணிவகுப்பு மரியாதையில் முதல் முறையாக 98 முதல் 100 வயதுடைய 4 ஐ.என்.ஏ. வீரர்கள் பங்கேற்கிறார்கள். முதன்முதலாக பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு வரலாற்றில் இடம் பெற உள்ளது. இந்த அணி வகுப்பில் Antonov An-32, M77 A2 Ultralightweight Field Howitzer போன்ற ராணுவ விமானங்கள் பங்கேற்க உள்ளன. மேலும் இந்திய ஆயுதப்படையினருக்காக ஷாங்க்நாத் உருவாக்கிய பாடல் இந்த அணிவகுப்பில் முதல் முறையாக ஒளிபரப்பப்படுகிறது.