Priyanka Gandhi Vadra

ட்விட்டரில் இணைந்தார் பிரியங்கா காந்தி!

2015 ஆம் ஆண்டு ராகுல் காந்தி ட்விட்டரில் இணைந்த பின் அவருடைய அரசியல் வாழ்க்கை ஏறுமுகம் கண்டுள்ளது என்றே சொல்லலாம். எதிர் கட்சிகளின் ஒவ்வொரு செய்கையையும் விமர்சித்து சிறிது கிண்டலாக அவர் போடும் டிவீட்களும், சரமாரியாக கேட்கும் கேள்விகளும் ஊடகங்களின் பார்வையை அவர்மீது திருப்பியது. இதையடுத்து உத்தர பிரதேசத்தில் தொடங்கி முழு நேர அரசியல்வாதியாக மாறியிருக்கும் அவரது தங்கை பிரியங்கா காந்தியும் தனக்கென ஒரு ட்விட்டர் பக்கத்தை இன்று தொடங்கினர். 15 நிமிடங்களில் 5000 பேர் அவரை பின்தொடர்ந்தனர். ட்விட்டர் என்ட்ரி அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

உத்தரப்பிரதேசத்தில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி

காங்கிரஸ் தலைமை உத்திரபிரதேசத்தின் 42 பாராளுமன்றத் தொகுதிகளை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கவனிப்பார் என்று அறிவித்தது. இதையடுத்து இன்று கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கும் அவர் ரேபரேலி தொகுதியில் நான்கு நாள் சூறாவளி பிரச்சாரம் செய்ய இருக்கிறார். வாருங்கள் அனைவரும் சேர்ந்து புது விதமான அரசியலை உருவாக்குவோம் என்று அவர் உத்தரபிரதேச மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

முதல் முறையாக காங்கிரசில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பதவி

காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரி பிரியங்கா, உ.பி., மாநில கிழக்கு பகுதி பொது செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், அவர் நேரடி அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார். பிப்ரவரி முதல் வாரத்தில் பிரியங்கா பொறுப்பேற்று கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரியங்காவை தவிர அகில இந்திய பொது செயலாளராக வேணுகோபாலும், உத்தர பிரதேச மேற்கு மாநில பொது செயலாளராக ஜோதிர் ஆதித்யா சிந்தியாவும், அரியானாவுக்கான பொது செயலாளராக குலாம் நபி ஆசாத்தும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.