Nanjil Sampath

அரசியலுக்கு ரீஎண்டரி கொடுத்த நாஞ்சில் சம்பத்

DMK: அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன் என சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் நாஞ்சில் சம்பத். ஆனால் தற்போது அவர் மிண்டும் அரசியலுக்கு வந்துள்ளார். டிடிவி தினகரனுக்கு ஆதரவான நிலையில் இருந்தவர் தினகரன் அவர்கள் ஆரம்பித்த அமமுக இயக்கத்தில் திராவிடம் என்ற சொல் இல்லாத காரணத்தால் அவர் அந்த இயக்கத்தில் இருந்து விலகினார். தற்போது திமுகவோடு இணைந்துள்ளதாக தகவல் வெளியாயின. அதனை உறுதி செய்யும் வகையில் திமுக நிகழ்வில் நாஞ்சில் சம்பத் பேசியது குறிப்பிடத்தக்கது.

வைகோவுக்கு பிரச்சாரம் செய்வேன் நாஞ்சில் சம்பத் கருத்து

MDMK தமிழக அரசியலில் 32 ஆண்டுகள் அனுபவம் பெற்ற பேச்சாளர் நாஞ்சில் சம்பத். ஆரம்பகாலத்தில் திமுகவிலும் பின்பு மதிமுகவிலும் அதன் பின்னர் அதிமுகவிலும் பணியாற்றியுள்ளார். அண்மையில் தினகரன் ஆதரவு நிலைப்பாடு எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிது காலம் அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கப் போகிறேன் என்று சென்ற அவர் வரும் மக்களவைத் தேர்தலில் வைகோவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என கருத்து தெரிவித்துள்ளார்.