ஆப்பிரிக்காவில், இருசக்கர வாகனங்களில் பெண்கள் அமர்ந்து பயணிக்க புதிய ஒழுங்குமுறை சட்டம் கொண்டுவர வேண்டும் என பாசியா வார்டு பிரதிநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர் “18 வயதிற்கு குறைந்த பெண்கள் இரு சக்கர வாகனத்தின் இரு புறங்களிலும் கால்களைவிட்டு பெண்கள் பயணிப்பது ஒழுக்ககேடான செயல் என்றும், இதனாலேயே நாட்டில் அதிக அளவிளான பெண்கள் திருமணத்திற்கு முன்பு கருவுறுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், நமது பாரம்பரியத்தில் பெண்கள் பக்கவாட்டாக கால்களை கீழ் விட்டு உட்கார்ந்து பயணிப்பது தான் சரியான முறை என்றும் இந்த பழக்கத்தை பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டும்” என தெரிவித்தார்.