MDMK 1 seat alloted

மதிமுவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்க வாய்ப்பு

மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெற்றுள்ளது. மேலும் அவர்களுக்கு ஒரு மக்களவைத் தொகுதியம் ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதி என்பது குறித்து மு க ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். அந்த வகையில் மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் அந்த ஒரு தொகுதியிலும் வைகோ போட்டியிட மாட்டார் என்பது உறுதியாகிறது, மாறாக ராஜ்யசபா சீட்டிற்கு வைகோ முயற்சிப்பார் என தெரிகிறது.

40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வேன் வைகோ உறுதி

மக்களவைத் தேர்தலில் இம்முறை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. மதிமுகவிற்கு ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெல்லும் என வைகோ கணித்துள்ளார். மேலும் 40 தொகுதிகளிலும் நானும் என் கழகத் தோழர்களும் பிரச்சாரம் செய்வோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி

DMK-MDMK Alliances: திமுக கூட்டணியில் அமைந்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சற்று முன்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ இந்த அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். மறுமலர்ச்சி திராவிட கழகம் எந்த தொகுதியில் போட்டியிடும் என்பதை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.