கோவா மாநிலத்தின் முதலமைச்சர் பாரிக்கருக்கு உடல்நிலை மிக மோசமான நிலையில் உள்ளதாக அம்மாநிலத்தின் துணை சபாநாயகர் தெரிவித்துள்ளார். புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் பாரிக்கர் தொடர் சிகிச்சையில் உள்ளார் .கடந்த 30 ஆம் தேதி மூக்கில் குழாய் மாட்டியதோடு சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன்பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்க பட்டுள்ளார். தற்போது கோவா முதலமைச்சர் பாரிக்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக துணை சபாநாயகர்
கூறியுள்ளார்.