income tax

வருமான வரி உச்சவரம்பை ரூ.8 லட்சமாக்க வேண்டும்: தம்பிதுரை வேண்டுகோள்

வருமான வரி உச்சவரம்பை ரூ.8 லட்சமாக்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார். கரூரில் 3 கோடியே 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைத்தல், சாலையை பலப்படுத்துதல், சிமெண்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருமான வரி விலக்கு உச்ச வரம்பை 8 லட்ச ரூபாயாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இடைக்கால பட்ஜெட் 2019 : தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிப்பு

மத்திய அரசின் 6வது மற்றும் கடைசி பட்ஜெட்டை இடைக்கால பட்ஜெட்டாக மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர், எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பினர். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன், அமைச்சரவை சகாக்களுடன் கோயல் ஆலோசனை நடத்தினார். பின்னர், ஜனாதிபதியையும் சந்தித்தார். தொடர்ந்து, இந்த பட்ஜெட்டிற்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளித்தது. இந்த பட்ஜெட்டில், தனி நபர் வருமான வரிக்கான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.5 லட்சமாக இருந்தால் வருமானவரி செலுத்த வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்களாக, பேட்டரி கார்களை இந்தியாவிலேயே தயாரிக்க முன்னுரிமை வழங்கப்படும், 2030-ல் உலகிலேயே பேட்டரி கார் அதிகம் தயாரிக்க நடவடிக்கை, வயதானவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பு, மீன்வளர்ப்புக்கு தனித்துறை அமைக்கப்படும், திரைப்பட தயாரிப்பிற்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படும், பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 26 வாரங்கள், அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் அமைக்கப்படும் போன்றைய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

சரவணா ஸ்டோர்ஸ், ரேவதி டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட 74 இடங்களில் வருமான வரி சோதனை

தமிழகத்தில் 74 இடங்களில் உள்ள வணிக நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் வந்ததைத் தொடர்ந்து சென்னையில் 72 இடங்களிலும், கோயம்புத்தூரில் 2 இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், ஜி ஸ்கொயர், லோட்டஸ் குரூப், ரேவதி வணிக நிறுவனங்கள் (ஜவுளிக்கடை, நகைக்கடை, சூப்பர் மார்க்கெட்), யோகரத்தினம் பொன் துரைக்கு சொந்தமான சரவணா ஸ்டோர்ஸ் ஆகியவை உள்ளிட்ட 74 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.