Colombo இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர் யசோதை செல்வகுமரன். இலங்கையில் நடந்த போர் காரணமாக 10 வயதில் ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் குடியேறினார். ஆஸ்திரேலியாவில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லண்டனில் உள்ள வெக்கரி பவுண்டேஷன் என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த ஆசிரியர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யசோதை செல்வகுமரனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவருக்கு 10 லட்சம் டாலர் பரிசு வழங்கப்படுகிறது.