காந்தி நினைவு நாளில் இந்து மகா தேசிய செயலாளர், சக்குன் பாண்டே காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, தொடர்ந்து காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவின் சிலைக்கு மாலை அணிவித்த சம்பவம் உத்திர பிரதேசத்தில் நடந்துள்ளது. இதை தொடர்ந்து அவர், தனது ஆதரவாளர்களுக்கு இனிப்புகளையும் வழங்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ இணைய தளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.