அடுத்த ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது. அதற்குள் இந்த பீக் ஹவர் மக்கள் கூட்டத்தை குறைக்க ஜப்பானிய அரசு பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பீக் நேர கூட்டத்தை குறைக்க டோக்கியோ மெட்ரோ நிர்வாகம் புதுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பீக் ஹவர் தவிர்த்து சில மணி நேரங்களுக்கு முன் மெட்ரோ ரெயிலை பயன்படுத்துவோர்களுக்கு இலவச நூடுல்ஸ் உணவு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.