இன்று பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கத்தின் தாக்கூர்நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். ’’நேற்று தாக்கல் செய்யப்பட்ட இடைகால பட்ஜெட் ஒரு தொடக்கம் தான், தேர்தலுக்கு பின்னர் தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட் இதனை காட்டிலும் சிறப்பம்சங்களை உடையதாய் அமையும், ஏழை எளியோருக்கு பயனுள்ளதாகவும், குறிப்பாக இளம் பட்டதாரிகளுக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் அமைக்கப்படும்’’. என்றார் பிரதமர் மோடி.