சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிரான மறு சீராய்வு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு சபரிமலை தேவசம் போர்டு ஒப்புக்கொண்டுள்ளது. இத்தனை நாட்கள் பின்பற்றி வந்த தங்களது நிலைப்பாட்டை மாற்றி கொள்வதாகவும் தேவசம்போர்டு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.