பிப்ரவரி 2வது வாரம் வரை தமிழகத்தில் பனி தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் காரணமாக உறைபனி அடுத்த 2 இரவுகள் தொடரும். காற்றில் ஏற்பட்ட சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.