பிப்ரவரி 2வது வாரம் வரை பனி தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Dense Fog

பிப்ரவரி 2வது வாரம் வரை தமிழகத்தில் பனி தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் காரணமாக உறைபனி அடுத்த 2 இரவுகள் தொடரும். காற்றில் ஏற்பட்ட சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.