Delhi Chief Minister

அரவிந்த் கெஜ்ரிவால் வரும் மார்ச் 1ம் தேதி முதல் உண்ணாவிரதம்

New Delhi: டெல்லியில் சில மாதங்களுக்கு முன்பு அரசின் தலைமைச் செயலாளர் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர்களுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் எந்தவிதமான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஐஏஎஸ் அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி துணை நிலை ஆளுநர் பைஜால் எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல், அவர்களை தூண்டிவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. நீண்ட சமரசத்திற்கு பிறகு போராட்டம் திரும்பப் பெறப்பெற்றது .இந்நிலையில் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி மார்ச் 1ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இன்று கெஜ்ரிவால் எதிர்க்கட்சிகளின் பிரமாண்டக் கூட்டம். திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ப்பு

கடந்த மாதம் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கொல்கத்தாவில் அனைத்து எதிர்க்கட்சிகளின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூடுகின்றன. இன்று மதியம் நடக்க இருக்கும் இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு, தேவகவுடா, பரூக் அப்துல்லா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். காங்கிரஸ் சார்பில் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை.