Cricket

அரசியல் லாபத்திற்காக கிரிக்கெட்டை குறிவைக்கக் கூடாது

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் கிரிக்கெட் போட்டிகளை குறிவைப்பது வேதனையளிப்பதாக என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது பேசியுள்ளார். உலகக் கோப்பை அட்டவணைப்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி நடைபெற வேண்டும்.இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.அரசியல் லாபத்திற்காக கிரிக்கெட்டை குறிவைக்கக் கூடாது என நான் நினைக்கிறேன்.

India vs Australia 2019: ஆஸிக்கு எதிரான இந்திய T20 அணி அறிவிப்பு

இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலிய அணி இரண்டு T20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் T20 போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நியூசிலாந்து போட்டிகளில் ஓய்வில் இருந்த விராட் மற்றும் பும்ராஹ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் கடந்த ஆண்டு IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் மயாங்க் மார்கண்டேவிற்கு சர்வதேச போட்டியில் முதல் முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி

இந்தியா – நியூசிலாந்து இடையே நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 35 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஐந்து ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைபற்றியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 252 ரன்களை எடுத்தது. போட்டியை வெல்லும் முனைப்போடு களம் இறங்கிய நியூசிலாந்து அணி 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தது. 90 ரன்கள் விளாசிய ராயுடு ஆட்ட நாயகன் விருதையும், இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமத் ஷமிக்கு தொடரின் ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி, நியூசிலாந்து அணி 32 ஓவர்களில் 136/6

இந்தியா – நியூசிலாந்து கிரிகெட் அணியில் இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி, 49.5 ஓவர்கள் முடிவில் 252 ரன்கள் எடுத்தது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ராய்டு 90 ரன்கள் அடித்தார். 253 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி 32 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்திய பந்து வீச்சாளர்களில் முகமது சமி 2 விக்கெட்டுகளையும், பாண்டேயா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இவருக்கு பதில் தோனியை களமிறக்குங்கள்! – சுனில் கவாஸ்கர்

நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் 3 ஒருநாள் போட்டிகளில் வென்று 4 ஆவது போட்டியில் படுதோல்வி அடைந்தது. விராட், தோனி போன்ற அனுபவ வீரர்கள் அந்த போட்டிக்கான அணியில் இடம்பெறாததும், இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படாததுமே தோல்வியின் காரணங்களாக விமர்சிக்கப்பட்டன. இதையடுத்து நாளை நடைபெற இருக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் விளையாட தோனி தகுதி பெற்றால், தினேஷ் கார்த்திக்கு பதிலாக அவரது இடத்தில் தோனி களமிறங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

200 ஒரு நாள் போட்டியில் விளையாடிய முதல் பெண் வீராங்கனையான மிதாலி ராஜ்

இந்தியா – நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையேயான 3 வது ஒரு நாள் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தனது 200வது ஒரு நாள் போட்டியில் விளையாடினார். மகளிர் கிரிக்கெட்டில் 200 போட்டிகளில் பங்கேற்கும் முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

இந்தியாவுக்கு எதிராக 4-வது ஒருநாள் போட்டி: 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி

இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே ஹாமில்டனில் நடந்து வரும் 4-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து 30 ஓவர் முடிவில் 92 ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து பவுலர் டிரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது 200வது போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 93 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து பவுலர் டிரெண்ட் போல்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகள் இடையேயான 5-வது ஒருநாள் போட்டி வரும் 3-ம் தேதி நடக்க உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிராக 4-வது ஒருநாள் போட்டி: 92 ரன்களில் இந்தியா ஆல் அவுட்

இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே ஹாமில்டனில் நடந்து வரும் 4-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து 30 ஓவர் முடிவில் 92 ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. 93 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஒரு ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 14 ரன்கள் எடுத்துள்ளது.

ஒருநாள் தொடரை கைப்பற்றுவது யார்? தென்ஆப்பிரிக்காவா? பாகிஸ்தானா?

தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்துள்ள 4 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளன. இந்நிலையில் இரு அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கேப்டவுனில் இன்று மாலை இந்திய நேரப்படி 4.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பதால், தொடரை கைப்பற்ற இரு அணிகளும் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

T20 உலகக்கோப்பை போட்டி அட்டவணை வெளியானது

2020-ல் நடைபெற உள்ள T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. ஆண்கள் அணிகளுக்கான தொடர் 2020ம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கும். இதில் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்று விட்ட நிலையில் மீதமுள்ள 8 அணிகளுக்கு தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. பெண்கள் அணிகளுக்கான தொடர் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. வரும் மார்ச் 8-ஆம் தேதி மெல்போர்னில் இறுதிப் போட்டி நடக்கிறது. ஒரே நாட்டில், ஒரே ஆண்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான T20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் நடப்பது இதுவே முதல்முறையாகும்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி

இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3-வது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அணி, 49 ஓவர்களில் 243 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 244 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 43 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்திருந்த நிலையில் 245 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இரு அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி வரும் 31ம் தேதி நடக்க உள்ளது.

3-வது ஒருநாள் போட்டி: 18 ஓவரில் 80/1 ரன்களை இந்தியா

இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3-வது ஒரு நாள் போட்டியில், 244 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 18 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கோலி 17 ரன்களுடனும், ரோகித் சர்மா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அணி, 49 ஓவர்களில் 243 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து பேட்ஸ்மேன் டைலர் 93 ரன்கள் அடித்தார். இந்திய பந்துவீச்சாளர்களில் சமி 3 விக்கெட்களையும், புவனேஸ்வர் குமார், சாஹல், பாண்டேயா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி: நியூசிலாந்து 35 ஓவர் முடிவில் 160/3

இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. 35 ஓவர்களில் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. ரோஸ் டைலர் 64 ரன்களுடனும், டாம் லேத்தம் 40 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். இந்திய பந்து வீச்சாளர்களில் புவனேஸ்வர் குமார், முஹமத் சமி, யுவேந்திரா சஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர்.

ஷிகர் தவான் தனது 27 வது ஒருநாள் சர்வதேச அரை சதம் அடித்தார்

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி, மவுண்ட் மன்குனாய் மைதானத்தில் நடந்து வருகிறது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. 22 ஓவர் முடிவில் 141 ரன்கள் எடுத்துள்ளது. ஷிகர் தவான் 65 ரன்கள் கடந்தார். இது இவருடைய 27 வது ஒருநாள் சர்வதேச அரை சதமாகும்.

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்து அணியில் சோதி மற்றும் டி கிராண்ட்ஹோம் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். சான்ட்னர் மற்றும் சவுதீ ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

நாளைய போட்டியிலும் நியூசிலாந்தை வீழ்த்திமா இந்தியா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை மவுண்ட் மன்கன்யில் நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் நேப்பியரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நாளைய ஆட்டத்தில் தோற்றால் நியூசிலாந்து கடும் நெருக்கடிக்கு தள்ளப்படும். இதனால் வெற்றி பெற கடினமாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசி 2 ஒருநாள்; டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு: பிசிசிஐ

நியூசிலாந்து அணியுடனான கடைசி இரண்டு போட்டிகள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இருந்து இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கவும், அவருக்கு பதிலாக இந்திய அணியை துணை கேப்டன் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இரு அணிகள் இடையே நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றுது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 38 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் விளையாடினர். இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

2018-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி தேர்வு

ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை கொண்ட கனவு அணியை ICC அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் 2018-ஆம் ஆண்டிற்கான ICC கனவு அணி, சிறந்த வீரார்களின் பெயரினை ICC இன்று அறிவத்துள்ளது. ICC டெஸ்ட், ஒருநாள் கனவு அணி என இரு அணிகளுக்கும் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார். கோலி, 2018-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், 2018-ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் ஆட்டகாரர், சிறந்த ஒருநாள் ஆட்டகாரர் என்னும் பெருமையினையும் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது போட்டியில் முதல் முறையாக களமிறங்கும் தமிழக வீரர்

மெல்பேர்னில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் தமிழக வீரர் விஜய் சங்கர் முதல் முறையாக களம் இறங்க உள்ளார். இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில், முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ரன்னில் வென்றது. 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர் 1-1 என்ற சமநிலையில் இருக்கிறது.