Cricket News

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் விராட் கோலி 41வது ஒருநாள் போட்டி சதம் அடித்தார். இந்திய அணி 48.2 ஓவர்களில் 281 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.

இந்திய அணிக்கு 314 ரன்கள் இலக்கு!

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 313/5 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச், கவாஜா சிறப்பான துவக்கம் அளித்தனர். கவாஜா அதிரடியாக விளையாடி 104 ரன்களை குவித்தார். ஒருநாள் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்து வெளியேறினார். 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 313 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 314 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டி: 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

India vs Australia 2nd ODI: இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடைபெற்றது, அதில் முதலில் விளையாடிய இந்திய அணி 250 ரன்கள் எடுத்தது, 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தியது. பின்னர் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 50 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

250 ரன்களை குவித்த இந்திய அணி

India vs Australia 2nd ODI: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.2 ஓவரிலேயே அனைத்து விக்கெடுகளையும் இழந்து 250 ரன்கள் சேர்த்தது, பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய இந்திய கேப்டன் விராட் கோலி சதமடித்தார். ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய கம்மிங்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி

India vs Australia 2nd ODI: இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. நடந்து முடிந்த டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இன்று இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது. 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி தன் 2-வது வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

13000 ரன்களை குவித்து தோனி சாதனை

India vs Australia:இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் இதுவரை அவர் லிஸ்ட் ஏ போட்டிகளில் 13000 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். மேலும் 13000 ரன்களை குவித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன் இந்திய அணியில் சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோர் மட்டுமே லிஸ்ட் ஏ 13000 போட்டிகளில் ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர்.

இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

India vs Australia, 2nd T20I: இன்று பெங்களூருவில் ஆஸ்திரேலியா இந்தியா இடையேயான 2வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் நிறைவிற்கு 190 ரன்கள் எடுத்தது. 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேக்ஸ்வெல் 113 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பினார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இதன்மூலம் டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியுள்ளது.

20 ஓவர் நிறைவில் இந்திய அணி 190/4

India vs Australia, 2nd T20I: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் விளாசியது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார் கேப்டன் விராட் கோலி. மேலும் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

இரண்டாவது டி20 போட்டியில் அஸ்திரேலிய அணி பந்து வீச்சு

India vs Australia, 2nd T20I: இரண்டாவது டி20யில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முதல் போட்டியில் ஆடிய ரோஹித் சர்மா, மாயங்க் மார்கண்டே, உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு, ஷிகர் தவான், விஜய் ஷங்கர், சித்தார்த் கௌல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 5வது ஓவர் முடிவில் 39 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் 28(17), தவான் 8(13) ரன்கள் எடுத்திருந்தனர்.

பெங்களூருவில் இன்று ஆஸ்திரேலியாவுடன் இரண்டாவது டி20 போட்டி – ஆஸ்திரேலியாவை பழி வாங்குமா இந்திய அணி!!

India vs Australia, 2nd T20I: இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது இன்று இரண்டாவது டி20 போட்டி இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடரை சமன் செய்யும் விதத்தில் இந்திய அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் லாபத்திற்காக கிரிக்கெட்டை குறிவைக்கக் கூடாது

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் கிரிக்கெட் போட்டிகளை குறிவைப்பது வேதனையளிப்பதாக என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது பேசியுள்ளார். உலகக் கோப்பை அட்டவணைப்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி நடைபெற வேண்டும்.இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.அரசியல் லாபத்திற்காக கிரிக்கெட்டை குறிவைக்கக் கூடாது என நான் நினைக்கிறேன்.

விராட் உருவத்தில் இம்ரான் கானை பார்க்கிறேன் – ரவி சாஸ்திரி

பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும் கேப்டனாக விராட்- உம் இருக்கும் கூட்டணி தொடர்ந்து வெற்றிகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் விராட் பற்றி பேட்டி அளித்த ரவிசாஸ்திரி, நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரை அருகாமையில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விராட் ஒரு அடையாளம். அவரின் தலைமை வேண்டும். அவரைப்போல உழைக்க யாரும் இல்லை. பயிற்சி பெற வருவது, ஒழுக்கம், தியாகம், தனிப்பட்ட விருப்பங்களை தவிர்ப்பது என அனைத்திலும் அவருக்கு நிகரில்லை. இப்படி ஒரு கேப்டனை பெற்றது இந்தியாவின் அதிர்ஷ்டம் என நினைக்கிறேன். விராட் பல வழிகளில் எனக்கு இம்ரான் கானை நினைவுபடுத்துகிறார். அவர் தனது சொந்த வழியில் அணியை முன்னெடுத்து தலைமை தாங்குகிறார். நான் பார்த்ததில் விராட் பல மடங்கு முன்னேற்றம் அடைந்து விட்டார். அவர் மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறார். உதாரணத்திற்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வென்றதை குறிப்பிடலாம் என்று கூறினார்.

முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் இணையும் சகோதரர்கள் !

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாட ஹர்திக் பாண்ட்யா தகுதி பெற்றுள்ளார். முன்னதாக க்ருணல் பாண்ட்யா விளையாடுவார் என்று அறியப்பட்ட நிலையில், இருவரும் இணையும் முதல் சர்வதேச போட்டியாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பாண்ட்யா சகோதரர்கள் இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஒரே அணியில் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை – இரண்டாவது இடத்தில் இந்திய அணி!

ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் நடந்த ஒருநாள் போட்டித் தொடர்களில் அபாரமாக செயல்பட்டு வெற்றிகளை குவித்த இந்திய அணி, 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் முதலிடத்திலும் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் 111 புள்ளிகளுடன் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.