Breaking news in trichy

ஹஜ் ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்க எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை

2019 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கு தமிழகத்திற்கு 3534 இடங்களை மத்திய அரசு ஒதுக்கியது. இந்த நிலையில் இதுவரை ஹஜ் பயணத்திற்காக 6379 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் யாத்திரையில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளதால் கூடுதலாக 1,500 ஹஜ் பயண ஒதுக்கீட்டை அளிக்குமாறு வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

இன்னும் சில ஆண்டுகள் மட்டும் உயிருடன் இருப்பேன் – கண்கலங்கிய வைகோ

கல்லூரி மாணவர்களிடையே காந்தி என்கின்ற தலைப்பில் பேசிய வைகோ, காந்தியின் நினைவு நாளில் அவருடைய உருவ பொம்மை பூஜா பாண்டே என்பவரால் சுட்டு தீயில் எரித்து கொண்டாடப்பட்டதை நினைவுகூர்ந்து கண் கலங்கினார். நா தழுதழுக்க தொடர்ந்து பேசிய அவர், நான் ஒரு போராளி. எனக்கு தோல்வியே கிடையாது. நாட்டின் மதச்சார்பின்மையை காப்பாற்ற தொடர்ந்து போராடுவேன். நான் இன்னும் சில ஆண்டுகள் மட்டும் தான் உயிருடன் இருப்பேன். ஆனால் வாழும் ஒவ்வொரு நிமிடமும் தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பேன் என்று உணர்ச்சி பொங்க பேசினார்.