வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கான 3 நாள் மாநாடு வாரணாசியில் கடந்த 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், நடிகையும், பாரதீய ஜனதா கட்சி எம்.பி.யுமான ஹேமமாலினி “மா கங்கா” என்ற 90 நிமிட நடன நாடகத்தை நடத்தினார். நதிகள் மற்றும் அவை மாசடைந்ததை கருத்தாக கொண்டு ஹேமமாலினி நடத்திய நடன, நாடகத்தை பார்த்த வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.