எல்லை பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுக்கு அதிநவீன துப்பாக்கிகள் வழங்க இந்திய பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. அமெரிக்காவிடம் இருந்து ”சிக் சயர்” ரக துப்பாக்கிகளை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் வழங்கியுள்ளார். அந்த துப்பாக்கிகள் இந்தியா – சீனா இடையே உள்ள 3,600 கி.மி எல்லைப் பகுதியில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. ”சிக் சயர்” துப்பாக்கிகளை தான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்துகிறார்கள்.