Akhilesh Yadav

நீங்களே மீண்டும் பிரதமராக வேண்டும் என வாழ்த்திய முலாயம் சிங்

இன்று மக்களவையில் சமாஜ்வாதியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங் உரை நிகழ்த்தினார், அப்போது மக்களவையில் உள்ள அனைவருமே மீண்டும் வெற்றி பெற வேண்டும் என கூறினார், அதன்பின்னர் பிரதமர் மோடியை பார்த்து மீண்டும் நீங்களே பிரதமதராக வேண்டும், என வாழ்த்து தெரிவித்தார். இது அருகில் அமர்ந்திருந்த சோனியா காந்திக்கு பெரும் அதிர்ச்சியாய் அமைந்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதியும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் பாஜகவுக்கு எதிராக அணி சேர்த்து வரும் தருணத்தில் முலாயம் சிங் இவ்வாறு பேசியிருப்பது தேசிய அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மம்தா பானர்ஜிக்கு ஆதரவுக் கொடி தூக்கும் கட்சித் தலைவர்கள்!

காவல் ஆணையர் ராஜீவ் குமாரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வந்ததை எதிர்த்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்தும் வங்கதேச முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். பாஜக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கும் இவருக்கு பல கட்சித் தலைவர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து பாசிச பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோரும் ஆதரவு கொடிகளை காட்டியுள்ளனர்.