AIADMK alliance

நம்பிக்கை இழக்காதீர்கள்- அன்புமணி

Lok Sabha Elections 2019: சென்னையில் இன்று அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது “அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டிருக்கும் எங்களின் கோரிக்கைகளை அதிமுகவிடம் கொடுத்துள்ளோம். ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை விடாமல் இருப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் உறுதி அளித்தார். எழுவர் விடுதலை நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று அறிமுகப்படுத்தி இருக்கிறது. நீட் மற்றும் மதுவிலக்கு வேண்டாம் என தொடர் அழுத்தம் கொடுப்போம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனியாக போட்டியிட்டு 6% வாக்குகள் பெற்று மூன்றாவது இடமும் அதற்காக அங்கீகாரம் கிடைக்கவில்லை. தமிழக மக்கள் எங்களுக்கு அங்கு இடம் கொடுக்கவில்லை. தேர்தல் அறிக்கையை பாராட்டினார்கள். ஆனால் ஓட்டு போடவில்லை. தமிழகத்தில் இனி எந்த கட்சியும் தனியாக வரும் 15 ஆண்டுகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. அதனால் தான் வியூகத்தை மாற்றியுள்ளோம்” என கூறினார்.

கூட்டணியில் இருந்து வெளியேறினார் தமிமுன் அன்சாரி

Lok Sabha Election 2019 Latest News:  அதிமுகவின் தோழமை கட்சிகளாக இருந்துவந்தது மனிதநேய ஜனநாயக கட்சி ஆனால் தற்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் நாங்கள் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம். இனி அதிமுகவுக்கு ஆதரவு கிடையாது என தமிமுன் அன்சாரி பகிரங்கமாக அறிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.