காஷ்மீர் மாநிலத்தில் இந்திய பாதுகாப்பு படையினர் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தின் மீது தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதினான். இதில் தூத்துக்குடியை சேர்ந்த தமிழக வீரர் ஒருவர் உட்பட 44
ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 20 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே பாதுகாப்பு படைக்கான மத்திய
அமைச்சரவைக் குழு பிரதமர் மோடி தலைமையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.