January 24, 2019
2-க்கும் மேற்பட்ட குழந்தை பெற்றால் வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும்: ராம்தேவ் ஆலோசனை
5 years ago
இந்தியாவில் வளர்ந்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு பிரபல பதஞ்சலி நிறுவன தலைவர், யோகா குரு ராம்தேவ் புதன்கிழமை இரண்டு குழந்தைகளுக்கும் அதிகமான குழந்தை பெற்றால் அவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்யலாம் என்ற புதிய ஆலோசனையை வழங்கியுள்ளார். மேலும், “இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள், தங்கள் வாக்களிக்கும் உரிமைகளை எடுத்துக் கொள்ளதுடன், தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படக்கூடாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.