பிப்ரவரி 6 ஆம் விண்ணில் பாய்கிறது ஜீசாட்-31

GSAT-31 on February 6

பிரெஞ்சு கயானாவிலிருந்து பிப்ரவரி 6 ஆம் தேதி ஜீசாட்-31 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது. இது 40 ஆவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைக்கோள் ஐரோப்பிய ராக்கெட்டான ஏரியன் 5 மூலம் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் விசாட் நெட்ஒர்க், டெலிவிஷன் இணைப்பு, டிஜிட்டல் செய்தி சேகரிப்பு, டி.டி.எச் டெலிவிஷன் சேவை, செல்போன் சேவை ஆகியவற்றிற்கும் பயன்படும்.