வோல்ஸ்வேகன் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை

volkswagen

சுற்றுச்சூழல்விதிக்கு எதிராக கார்களை வடிவமைத்த வோல்ஸ்வேகன் நிறுவனத்தின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தர எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுற்றுச்சூழல்விதிக்கு எதிராக கார்களை வடிவமைத்த வோல்ஸ்வேகன் நிறுவனம் நாளை மாலை 5 மணிக்குள் 100 கோடி ரூபாய் செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தர விடப்பட்டுள்ளது. தவறினால் இந்தியாவில் உள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்த கார்களில் இருந்து வெளியாகும் அதிகபடியான நைட்ரஜன் ஆக்ஸைடு (NOx) மூலம் ஏற்படும் புகையால் காரணமாக நுரையில் மற்றும் இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.