திருமண பரிசாக மோடிக்கு வாக்களிக்க கோரும் கர்நாடக தம்பதி

Marriage-Invite-to-vote-modi

கர்நாடகாவின் தேவாங்கிரே பகுதியை சேர்ந்த புதுமண தம்பதி நாகராஜ் மற்றும் ரேகா ஆகியோருக்கு வரும் பிப்ரவரி 8-ம் தேதி, திருமணம் நடைபெற உள்ளது. தங்கள் திருமணத்தை முன்னிட்டு இருவரும் திருமண அழைப்பிதழை விநியோகித்து வருகின்றனர். இந்த திருமண அழைப்பிதழில், தங்களுக்கு திருமண பரிசாக மக்களைவை தேர்தலில் மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதை அறிந்த பிரதமர் மோடி, அந்த தம்பதியினருக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.