5ஜி தொழில்நுட்பம் விரைவில் தயாராகி விடும்: இந்தியத் தொலைத் தொடர்பு துறை தகவல்

Aruna Sundar Rajan

2020ம் ஆண்டில் மொபைல் சேவைக்கான 5ஜி தொழில்நுட்பம் தயாராகும் என இந்தியத் தொலைத் தொடர்பு துறை ஏற்கனவே தெரிவிந்திருந்த நிலையில், 5 ஜி, ஒவ்வொருவரையும் டிஜிட்டல் பயன்பாட்டிற்குள் கொண்டு வரும் என மத்திய தொலைதொடர்புத்துறை செயலாளர் அருணா சுந்தர்ராஜன் கூறியுள்ளார். மேலும், இந்த ஆண்டின் மத்தியில் 5ஜி அலைக்கற்றையை ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், சுமார் 4.9 லட்சம் கோடி மதிப்பில் 8,644 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை ஏலம் விட பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.