கஜா புயலால் வீடு இழந்த விவசாயிகளுக்கு சொந்த செலவில் வீடுகள் கட்டிக் கொடுத்த சூர்யா, கார்த்திரசிகர்கள்

Surya-Karthi

கஜா புயலில் வீடு இழந்த விவசாயிகளுக்கு, தமிழ்த் திரையுலகில் இருந்து முதல் நபராக, நடிகர் சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் ஐம்பது லட்ச ரூபாய் நிதி உதவினர். அவர்களைத் தொடர்ந்து நேரடியாக களத்தில் இறங்கிய சூர்யா – கார்த்தி ரசிகர் மன்றத்தினர், விவசாயிகளுக்கு வீடு கட்டித் தரும் முயற்சியில் இறங்கி, பத்து லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பதினைந்து வீடுகளை கட்டியுள்ளனர். இந்த வீடுகள் ஒரு வாரத்தில் கட்டி முடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.