Karthi

கார்த்தி நடிப்பில் பட பூஜையுடன் தொடங்கியது ‘கார்த்தி 19’

தற்போது ‘கைதி’ என்ற படத்தில் நடந்து வரும் நடிகர் கார்த்தி, ‘கார்த்தி 19’ என்ற அழைக்கப்படும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான படபிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. அதிக பொருள் செலவில் இப்படத்தை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள். எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையான இப்படத்தில், நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ரஷ்மிகா மண்டன்னா என்ற நடிகை தமிழில் அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.

செல்பி விஷயத்தில் மரியாதை போய்விட்டது கார்த்தி கருத்து

ஜூலை காற்றில் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். அப்போது அவர் செல்ஃபி என்ற விஷயத்துக்கு ஒரு மரியாதையை இல்லாமல் போய்விட்டது அனுமதி கேட்டு விட்டு புகைப்படம் எடுப்பதே இல்லை முகத்துக்கு முன்னால் கொண்டுவந்து செல்போன் கேமராவை நிறுத்துகிறார்கள் பின்னால் ஒரு பிளாஷ் முன்னாள் ஒரு பிளாஷ் என கண்ணில் பட்டால் என்ன ஆவது போட்டோ எடுக்கலாமா என்று ஒரு மரியாதைக்கு கேட்க வேண்டும் என்பது கூட தெரியாமல் போய்விட்டது என்று வருத்தமாக தெரிவித்தார்.

கஜா புயலால் வீடு இழந்த விவசாயிகளுக்கு சொந்த செலவில் வீடுகள் கட்டிக் கொடுத்த சூர்யா, கார்த்திரசிகர்கள்

கஜா புயலில் வீடு இழந்த விவசாயிகளுக்கு, தமிழ்த் திரையுலகில் இருந்து முதல் நபராக, நடிகர் சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் ஐம்பது லட்ச ரூபாய் நிதி உதவினர். அவர்களைத் தொடர்ந்து நேரடியாக களத்தில் இறங்கிய சூர்யா – கார்த்தி ரசிகர் மன்றத்தினர், விவசாயிகளுக்கு வீடு கட்டித் தரும் முயற்சியில் இறங்கி, பத்து லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பதினைந்து வீடுகளை கட்டியுள்ளனர். இந்த வீடுகள் ஒரு வாரத்தில் கட்டி முடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.