சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் மழை – மக்கள் மகிழ்ச்சி

chennai rains news

Chennai Rains: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று பலத்த மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து இருக்கலாமோ என கணிக்கப்படுகிறது.