உலக முதலீட்டாளர்களை கவர்ந்த நடிகர் அஜித் குழுவின் “ட்ரோன் டாக்ஸி”

Ajith Drone Taxi

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடிகர் அஜித் தொழில்நுட்ப வழிகாட்டியாக கொண்ட தக்ஷா மாணவர் குழு இந்தியாவில் முதல் முறையாக வானில் பறக்கும் ஏர் டாக்சியை தயாரித்து சாதனை படைத்தது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தக்ஷா குழு வடிவமைத்த பெரிய வடிவிலான ட்ரோன் டாக்ஸி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு நிறுவனங்கள் தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்துள்ள நிலையில் தக்ஷா குழுவின் மாணவர்கள் உருவாக்கியுள்ள ட்ரோன் டாக்ஸி முதலீட்டாளர்களை கவர்ந்தது.