காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு: தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு

Regional Meteorological Centre

காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில், வானம் மேகமூட்டமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.