தமிழகத்தில் குறைந்தது 30 இடங்களை கைப்பற்றுவோம் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி பிப்ரவரி 19ம் தேதி கன்னியாகுமரி வர உள்ளார். தமிழக நலனுக்கான திட்டங்களை பற்றி சிந்திக்காமல் கண்மூடித்தனமாக மதிமுக மோடியை எதிர்க்கிறது. பாரதீய ஜனதா கட்சி கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்து, அறிவிக்கப்படும். தமிழகத்தில் குறைந்தது 30 இடங்களை கைப்பற்றுவோம் என்றார்.