கேப்டன் விஜயகாந்த் சென்னை திரும்பினார் : மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த தேமுதிக கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். அவருக்கு பலத்தவரவேற்பு அளிக்கப்பட்டது. புல்வாமா தீவிரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்திற்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை பதிவிட்டார் கேப்டன் விஜயகாந்த். விஜயகாந்த் நாடு திரும்பியதும் தேமுதிகவின் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கட்சி சார்பில் கூறியிருந்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் ஏதேனும் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.