திருச்சியில் அடுத்தடுத்த நாளில் இரண்டு போலீஸார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சிறப்பு காவல்படைக்கான காவலர் குடியிருப்பில் காவலர் முத்து தூக்கில் தொங்கியதுடன் ரத்த காயங்களுடன் கண்டெடுக்கபட்டார். நேற்று மாலை திருச்சி பெண்கள் சிறை வார்டனாக பணிபுரியும் தமிழ்செல்வியும் தற்கொலை செய்து கொண்டார் இதற்கு அவரது காதல் தோல்வியே காரணம் என கூறப்படுகிறது. இந்த இரு சம்பங்களும் குறித்துட் திருச்சி காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.