Tirupur News

Pulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை – சீமான்

Pulwama Terror Attack : தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், “காரில் 360 கிலோ வெடி பொருட்களுடன் ஒருவன் வந்து மோதும் அளவிற்கு ராணுவ வீரர்கள் பயணித்த இடத்தில் ஒரு சோதனை சாவடி கூட இல்லையா? இந்தியாவில் பாதுகாப்பு படையினருகே பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்தால் பதட்டமாக இருக்கிறது என்று கூறினார். மேலும் ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.



Lok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான் கூட்டணி ஜி கே வாசன்

Lok Sabha 2019 TMC News : திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன், “தமாகாவின் பலத்தை அங்கீகரிக்க கூடிய கட்சியுடன் தான் கூட்டணி என்று கூறினார். மேலும் காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு தன் அனுதாபங்களை தெரிவித்த அவர், இரண்டாண்டு ஆட்சியில் அதிமுக அரசு நிறைய மக்கள் நல பணிகள் செய்துள்ளதாகவும் நிலுவையில் உள்ள பணிகளையும் விரைந்து முடிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.