திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ம.தி.மு.க. நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் நிதியை பெற்றுக் கொண்டார். பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட வேண்டும். மேலும் பா.ஜ.க. அரசு தமிழகத்திற்கு செய்த துரோகம் கொஞ்ச நஞ்சமல்ல. இத்தேர்தலில் 125 இடங்களை மட்டுமே பாஜகவால் வெல்லமுடியும். தமிழகத்தைப் பொறுத்தவரை 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும் என்றார்.