Thirumavalavan

ரஜினி , திருமாவளவன் திருநாவுக்கரசர் சந்திப்பு

வருகின்ற மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அண்மையில் திருமாவளவன் ரஜினிகாந்த் ஆகியோர் திருநாவுக்கரசரின் இல்லத்திற்கு வந்து அவரை நேரில் சந்தித்தனர் இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன் அரசியல் நிலைப்பாட்டை அறிவித்த ரஜினி தனது படங்களில் பிசியாக உள்ளார். காங்கிரஸ் கட்சியும் விடுதலை சிறுத்தைகளும் திமுகவோடு இணக்கமான சூழலில் இருக்கும் தருணத்தில் ரஜினி அவர்களை சந்தித்தது சந்தேகத்தை ஏற்படுத்தினாலும் இது மரியாதை நிமிர்த்தமான சந்ததிப்பு எனவே கூறப்படுகிறது.

டாக்ஸி ஓட்டுநர் ரமேஷ் மரணம் – நடவடிக்கை தேவை திருமாவளவன் கோரிக்கை

காவல் துறையின் நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்ற வீடியோ வாக்குமூலம் தந்துவிட்டு ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டார் டாக்ஸி ஓட்டுநர் ரமேஷ். இதில் சம்பந்தப்பட்ட போலீசார் யார் என்பதை அறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.