Thamimun Ansari

கூட்டணியில் இருந்து வெளியேறினார் தமிமுன் அன்சாரி

Lok Sabha Election 2019 Latest News:  அதிமுகவின் தோழமை கட்சிகளாக இருந்துவந்தது மனிதநேய ஜனநாயக கட்சி ஆனால் தற்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் நாங்கள் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம். இனி அதிமுகவுக்கு ஆதரவு கிடையாது என தமிமுன் அன்சாரி பகிரங்கமாக அறிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

AIADMK News in Tamil- இலை கட்சியில் சலசலப்பு

மக்களவை தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அதிமுக முடிவு செய்துள்ளது. இதற்கு தம்பிதுரை கடுமையான அதிருப்தியை தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களான தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோருக்கும் அதிமுக பாஜகவோடு கூட்டணி அமைப்பதில் விருப்பமில்லை எனவும் கூட்டணி அமைந்தால் எங்கள் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று கூறியுள்ளனர். ஏற்கனவே அரசிற்கு பெருமான்மை இல்லாத நிலையில் ஆதரவை திரும்ப பெறுவோம் என அவர்கள் கூறியிருபப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.