Tasmac

டாஸ்மாக் மது கடை – மதுரை நீதிமன்றம் அறிவுரை

வருவாய்க்காக டாஸ்மாக் மதுக்கடைகளை நம்பாமல் மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டுமென தமிழக அரசை உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது. மாநிலத்தின் பண வரவில் பெரும் பகுதி மதுக்கடைகளிலிருந்தே வருகிறது. மக்களின் நலனைக் குலைக்கும் மதுவை நம்பி இல்லாமல் வேறு வழிகளில் வரவை அதிகரிக்க முயற்சிக்குமாறு அரசை நீதிமன்றம் சாடியுள்ளது.

குடிமகன்கள் கவனத்திற்கு…தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளை மூட ஹைகோர்ட் கிளை உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட கோரி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரதீஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், காந்தியடிகள் நினைவுதினமான நாளை தமிழகம் முழுவதும் ஒருநாள் மட்டும் டாஸ்மாக் கடைகளை மூடவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.